ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு பேரிடி! சரிந்தது பங்குகள்! டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்புகள் கடும் வீழ்ச்சி அடைந்ததால் உலகின் பெரும் பணக்காரர் எலான் மஸ்க், தமது டிரில்லியனர் அந்தஸ்தை இழந்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் முதலிடத்தில் உள்ள எலான் மஸ்க், தனது ‘டிரில்லியனர்’ அந்தஸ்தை இழந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் உலக வணிக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் சந்தை மதிப்பில் ஏற்பட்ட சரிவு இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
எலான் மஸ்க் தலைமையிலான ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா மற்றும் எக்ஸ் நிறுவனங்கள் உலகளவில் பெரும் செல்வாக்கு கொண்ட தொழில்நுட்ப நிறுவனங்களாக விளங்கி வருகின்றன. குறிப்பாக விண்வெளி தொழில்நுட்ப துறையில் ஸ்பேஸ் எக்ஸ் பெற்ற வளர்ச்சி மற்றும் மின்சார வாகன சந்தையில் டெஸ்லாவின் ஆதிக்கம் ஆகியவை மஸ்க்கின் சொத்து மதிப்பை தொடர்ந்து உயர்த்தி வந்தன.
அண்மையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மதிப்பீடு உயர்ந்ததைத் தொடர்ந்து, உலகின் முதல் டிரில்லியனர் என்ற நிலையை எலான் மஸ்க் எட்டியதாக பல்வேறு சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இது உலக வணிக வரலாற்றில் முக்கிய மைல்கல்லாகவும் பார்க்கப்பட்டது.
இதையும் படிங்க: 1.2 பில்லியன் டாலர் கடன்!! பைஜுஸ் நிறுவனர் பைஜு ரவீந்திரனுக்கு 6 மாதம் சிறை! சிங்கப்பூர் நீதிமன்றம் அதிரடி!
ஆனால், சமீப வாரங்களில் உலக பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் மனநிலையில் ஏற்பட்ட தாக்கம் காரணமாக ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் சந்தை மதிப்பு குறைந்துள்ளது. இதன் விளைவாக எலான் மஸ்க்கின் மொத்த நிகர சொத்து மதிப்பு சுமார் 957 பில்லியன் அமெரிக்க டாலராக குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், டிரில்லியன் டாலர் சொத்து மதிப்பைக் கடந்திருந்த நிலையை அவர் தற்காலிகமாக இழந்துள்ளார். இருப்பினும், உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்ற இடத்தை எலான் மஸ்க் தொடர்ந்து தக்க வைத்திருக்கிறார்.
சந்தை நிலவரங்கள் வேகமாக மாறக்கூடியவை என்பதால், எதிர்காலத்தில் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் மீண்டும் உயர்ந்தால், எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். இதனால், அவர் மீண்டும் டிரில்லியனர் பட்டியலில் இடம்பெறுவதற்கான வாய்ப்பும் திறந்தே உள்ளது.
இதையும் படிங்க: இனி அமெரிக்கா சொன்னாலும் கேட்க மாட்டோம்! லெபனான் விவகாரம்! இஸ்ரேல் பிடிவாதம்!