வேலியே பயிரை மேயுது... உறுத்தலயா முதல்வரே..! EPS விளாசல்..!
தமிழக வெற்றிக் கழகத்தை பொய்க்கால் குதிரை அரசு என EPS விமர்சித்துள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தில் காவலர் உள்ளிட்ட மூவர் சிறுவனுக்கு வாயில் மது ஊற்றி, கொடும் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சிறுவன் தன்னை தற்காத்துக் கொள்ள டிவி ரிமோட்டால் காவலரைத் தாக்கிவிட்டு தப்பி ஓடி, அசோக் நகர் காவல் நிலையத்திற்கு நடந்தே வந்து புகார் அளித்துள்ளதாக செய்திகள் வருவதாக குறிப்பிட்டு உள்ளார்.
தமிழகத்தில் நாள்தோறும் பரிணமிக்கும் குற்றச் செயல்களின் தன்மை மிகுந்த அச்சமூட்டுகிறது என்று எடப்பாடி பழனிச்சாமி கவலையை வெளிப்படுத்தி உள்ளார்.எந்த குழந்தைகளை வைத்து நீங்கள் வாக்கு சேகரித்தீர்களோ, அதே குழந்தைகள் உங்கள் ஆட்சியில் பாதுகாப்பு இன்றி நிற்கின்றனர்.
இதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் என முதல்வர் விஜய்க்கு கேள்வி எழுப்பினார். “சட்டம் ஒழுங்கு ஆய்வுக் கூட்டம்” என ஒன்றை நீங்கள் நடத்தியதாக ஒரு வீடியோவை உங்கள் அரசு வெளியிட்டது என்றும் அது மற்றுமொரு சம்பிரதாயத்திற்காண கூட்டமாக மாற்றி விடப்பட்டு உள்ளதோ என்ற சந்தேகங்கள் வலுப்பெறுகிறது எனவும் தெரிவித்தார். வேலியே பயிரை மேயும் கொடூரம் நடப்பது உங்கள் மனதை உறுத்தவில்லையா என சாடினார்.
இதையும் படிங்க: சாமர்த்தியமாக சாதித்து காட்டிய இபிஎஸ்..! முடிஞ்சது பிரச்சனை..! மனுக்கள் வாபஸ்..!!
சிறுவனுக்கு நேர்ந்துள்ள இந்த கொடுந்துயருக்கு காரணமான காமுகர்கள் யாராக இருப்பினும், அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இனியேனும் “கோட்-சூட்-போட்டோஷூட்” மாடல் ஆட்சியை கைவிட்டு, சட்டம் ஒழுங்கைக் காக்க உணர்வோடு செயல்பட வேண்டும் என கூறியுள்ள EPS, பொய்க்கால் குதிரை அரசு என்று விமர்சித்தார்.
இதையும் படிங்க: அதிமுக பிளவுக்கு full stop..! சபாநாயகர் பிரபாகரை நேரில் சந்தித்த சி.விஜயபாஸ்கர்!