×
 

எப்ஸ்டீன் மோசமான நபர்! 20 வருசத்துக்கு முன்னாடி நடந்தது?! உலகை உலுக்கிய பாலியல் குற்றவாளி?! எதையும் மறைக்கல! ட்ரம்ப் ஓபன் டாக்!

எப்ஸ்டீன் தொடர்பான 35 லட்சம் பக்கங்கள் கொண்ட ரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. இதில் டிரம்பின் பெயர் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவின் பிரபல தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கு உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

கரீபியன் தீவில் 'லிட்டில் செயின்ட் ஜேம்ஸ்' என்று அழைக்கப்படும் தனித்தீவை வாங்கி, அங்கு பல முக்கிய தலைவர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், பில்கேட்ஸ், இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ உள்ளிட்டோர் இவருடன் தொடர்பில் இருந்ததாக புகார்கள் வந்தன.

எப்ஸ்டீன் 2019இல் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சியினரும், சமூக ஊடகங்களிலும் கோரிக்கை எழுந்தது. 

இதையும் படிங்க: நான் வருந்துறேன்! மன்னிப்பு கேட்டுக்கிறேன்!! உலகை அதிர வைக்கும் எப்ஸ்டீன் பாலியல் வழக்கு! பில்கேட்ஸ் விளக்கம்!

கடந்த ஆண்டு எப்ஸ்டீன் ஃபைல்ஸ் டிரான்ஸ்பரன்சி ஆக்ட் சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி, அமெரிக்க நீதித்துறை ஜனவரி 30, 2026 அன்று 35 லட்சம் பக்கங்களுக்கும் மேற்பட்ட ஆவணங்கள், 1.8 லட்சம் புகைப்படங்கள், 2000 வீடியோக்களை வெளியிட்டது.

இந்த ஆவணங்களில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பெயர் 3000க்கும் மேற்பட்ட இடங்களில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில ஆவணங்களில் டிரம்ப்-எப்ஸ்டீன் இடையேயான பழைய நட்பு, ஃப்ளைட் லாக்ஸ், மாரா-லாகோ கிளப் தொடர்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. 

இருப்பினும், பெரும்பாலான குறிப்புகள் செய்தி கட்டுரைகள், பொது தகவல்கள் அல்லது சில உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டுகளாகவே உள்ளன. டிரம்ப் மீது எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என நீதித்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டிரம்ப் கூறுகையில், “என்னிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை. எப்ஸ்டீனுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. அவர் மோசமானவர் என தெரிந்தவுடன் 20 ஆண்டுகளுக்கு முன்பே நட்பை துண்டித்தேன். எனது மாரா-லாகோ கிளப்பிலிருந்து அவரை வெளியேற்றினேன். இந்த ஆவணங்கள் என்னை முழுமையாக விடுவிக்கின்றன” என்றார்.

இந்த வெளியீடு எப்ஸ்டீன் வழக்கின் முழு உண்மையை வெளிக்கொணருமா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. பலர் மேலும் ஆவணங்கள் வெளியிடப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். உலகம் முழுவதும் இந்த விவகாரத்தை உற்று நோக்கி வருகிறது.

இதையும் படிங்க: நான் வருந்துறேன்! மன்னிப்பு கேட்டுக்கிறேன்!! உலகை அதிர வைக்கும் எப்ஸ்டீன் பாலியல் வழக்கு! பில்கேட்ஸ் விளக்கம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share