×
 

உங்க ஒத்துழைப்பு கண்டிப்பா தேவை! ரஷ்யாவிடம் நட்புக்கரம் நீட்டும் சிரியா! அதிபர்கள் ஆலோசனை!

ரஷியா தலைநகர் மாஸ்கோவில், அதிபர் விளாதிமீர் புதினை, சிரியாவின் இடைக்கால அதிபர் அஹமத் அல் - ஷரா நேரில் சந்தித்துள்ளார்.


சிரியாவின் இடைக்கால அதிபர் அஹ்மத் அல்-ஷரா, ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை நேரில் சந்தித்து உரையாடினார். சிரியாவில் 50 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்த அசாத் குடும்ப ஆட்சியை கவிழ்த்து, முன்னாள் அதிபர் பஷார் அல்-அசாத் குடும்பத்துடன் ரஷியாவில் தஞ்சமடைந்த நிலையில், அல்-ஷரா சர்வதேச ஆதரவைப் பெற முயன்று வருகிறார். இந்த சந்திப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மீட்டெடுக்கும் முக்கிய அடியாகக் கருதப்படுகிறது.

சிரியாவின் உள்நாட்டுப் போரில், அல்-அசாத் அரசுப் படைகளுக்கு ஆதரவாக ரஷியா களமிறங்கியது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், கடந்த டிசம்பரில் அல்-ஷராவின் போராளிக் குழு வெற்றி பெற்று அல்-அசாத் ஆட்சியை கவிழ்த்தது. 

அல்-ஷரா, முன்னர் அல்-கவுனா சிரியப் பிரிவின் தலைவராக இருந்தவர், இப்போது சிரியாவின் இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றுள்ளார். இந்த சந்திப்பு, அல்-அசாத் ரஷ்யாவில் தஞ்சமடைந்த 10 மாதங்களுக்குப் பின் அல்-ஷராவின் முதல் அதிகாரப்பூர்வ ரஷிய பயணமாகும்.

இதையும் படிங்க: #weatherupdate: தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்... உஷார் மக்களே...!

கிரெம்லினில் நடந்த சந்திப்பின் போது, அல்-ஷரா, "இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மீட்டெடுத்து மறுஉருவாக்கம் செய்ய விரும்புகிறோம்" எனத் தெரிவித்தார். அல்-அசாத் ஆட்சியின் காலத்தில் அமைக்கப்பட்ட ரஷியாவின் விமானப் படை (ஹமேய்மிம்) மற்றும் கடற்படை (தார்துஸ்) தளங்களை அல்-ஷரா அரசு மதிக்கும் என உறுதியளித்தார். 

இருப்பினும், தளங்களின் அளவு குறித்து இன்னும் தெளிவான உடன்பாடு இல்லை. புதின், "80 ஆண்டுகளுக்கும் மேலான சிறப்பு உறவுகள் உள்ளன. சிரிய மக்கள் நலனுக்காகவே நாங்கள் செயல்பட்டோம்" எனக் கூறி, உறவுகளை விரிவுபடுத்த விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

இந்த சந்திப்பில், இரு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்புகள், முதலீடுகள், எரிசக்தி துறை உள்ளிட்ட பொருளாதார உறவுகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சிரிய அதிகாரிகள், ரஷ்யாவிடமிருந்து கோதுமை விநியோகம் மீண்டும் தொடங்குவது, போர் சேதங்களுக்கான இழப்பீடு, சிரிய இராணுவத்தை மீட்டமைப்பதற்கான உதவி ஆகியவற்றை கோரியுள்ளனர். 

மேலும், ரஷ்யா அல்-அசாத் படைகளின் மீதான ஆயுத உதவியை நிறுத்துவதற்கான உத்தரவாதங்களையும் கோரியுள்ளனர். அல்-அசாதை ஏழரை செய்ய கோரியுள்ள சிரியா, "சட்டப்பூர்வ வழிகளைப் பயன்படுத்துவோம்" என அல்-ஷரா சமீபத்திய நேர்காணலில் தெரிவித்தார்.

இந்த சந்திப்பு, ரஷ்யாவின் "நெகிழ்வான" வெளியுறவுக் கொள்கையை வெளிப்படுத்துகிறது. அல்-அசாதுக்கு ஆதரவாக இருந்த ரஷ்யா, இப்போது அல்-ஷராவுடன் உறவு ஏற்படுத்தி, சிரியாவில் தனது தளங்களை பாதுகாக்க முயல்கிறது. சர்வதேச நாடுகள், சிரியாவின் புதிய ஆட்சியை அங்கீகரித்து வருவதோடு, ரஷ்யா-சிரிய உறவு மீண்டும் வலுவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சிரியாவில் நீண்டகால உள்நாட்டுப் போருக்குப் பின், இந்த சந்திப்பு அமைதி முயற்சிகளுக்கு உதவும் என நம்பப்படுகிறது.

இதையும் படிங்க: Gen Z போராட்டம்! தப்பியோடிய அதிபர்! மடகாஸ்கரில் ராணுவ ஆட்சி அமல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share