×
 

உலகளவில் நாமதான் டாப்பு! கெத்துக்காட்டிய அமலாக்கத்துறை! எப்.ஏ.டி.எப்., பாராட்டு!

சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பதை தடுக்கும் சர்வதேச கண்காணிப்பு அமைப்பான, எப்.ஏ.டி.எப்., எனப்படும் நிதி நடவடிக்கை பணிக்குழு, நம் நாட்டின் சொத்து மீட்பு நடைமுறையை பாராட்டி உள்ளது.

சட்டவிரோத பணப் பரிமாற்றம், பயங்கரவாத நிதி உதவி போன்ற கொடிய குற்றங்களைத் தடுக்கும் உலகின் 'காவலர்' அமைப்பான FATF (நிதி நடவடிக்கை பணிக்குழு), இந்தியாவின் அமலாக்கத்துறை (ED)யை உலக முன்மாதிரியாகப் பாராட்டியுள்ளது. பாரிஸ் தலைமையகத்தில் இருந்து நேற்று வெளியிடப்பட்ட 'சொத்து மீட்பு வழிகாட்டுதல் மற்றும் சிறந்த நடைமுறைகள்' அறிக்கையில், இந்தியாவின் சொத்து மீட்பு அமைப்பு 'வலுவான, தொழில்நுட்ப அடிப்படையிலான, ஒருங்கிணைந்த' என்று புகழாரம் சூட்டியுள்ளது. 

குற்றவாளிகளின் சொத்துக்களை விசாரணை முடிவதற்கு முன்பே முடக்கும் இந்தியாவின் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டம் (PMLA), உலக நாடுகளுக்கு 'மாடல்' என்று FATF தெரிவித்துள்ளது. இது, இந்தியாவின் ஊழல் ஒழிப்பு போருக்கு பெரும் பெருமை சேர்த்துள்ளது.

FATF அறிக்கை விவரிக்கும் போது, "இந்தியா பொருளாதார குற்றங்களில் இருந்து பெறப்பட்ட சொத்துக்களை மீட்பதில் வலுவான கட்டமைப்பு கொண்டுள்ளது. தொழில்நுட்பம், சட்டக் கருவிகள், பல அமைப்புகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகியவற்றை இணைத்து, விரைவான சொத்து முடக்கம் மற்றும் பறிமுதல் செய்யப்படுகிறது" என்று கூறுகிறது. 

இதையும் படிங்க: சேட்டை புடிச்ச பய சார்! சீன அதிபரின் உதவியாளர்கள் போல மிமிக்ரி செய்த ட்ரம்ப்!

குற்றவாளி அல்லாத நபர்களின் சொத்துகளையும் முடக்கும் வசதி, விசாரணைக்கு முன்பே நடவடிக்கை எடுக்கும் திறன் ஆகியவை இந்தியாவை தனித்துவமாக்குகின்றன. CBI, அமலாக்கத்துறை போன்ற மத்திய விசாரணை அமைப்புகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு, வெற்றிக்கு முக்கிய காரணம் என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. "இதை மற்ற நாடுகள் பின்பற்ற வேண்டும்" என்று FATF பரிந்துரைத்துள்ளது.

இந்தியாவின் PMLA சட்டம், சந்தேகத்திற்குரிய சொத்துக்களை உடனடியாக முடக்க உதவுகிறது. கடந்த சில ஆண்டுகளில், அமலாக்கத்துறை ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளது. ஊழல், பணமோசடி, போதைப்பொருள் கடத்தல் போன்ற வழக்குகளில் இது பெரும் பங்காற்றுகிறது.

FATF இன் இந்தப் பாராட்டு, இந்தியாவின் ஊழல் ஒழிப்பு முயற்சிகளுக்கு உலக அங்கீகாரம் அளித்துள்ளது. பிரதமர் மோடியின் 'ஊழலுக்கு எதிரான போர்'க்கு இது பெரும் ஊக்கம். உலக நாடுகள் இந்தியாவைப் பின்பற்றினால், சட்டவிரோத பண ஓட்டம் பெருமளவு குறையும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

FATF அமைப்பு, 200-க்கும் மேற்பட்ட நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டு, பயங்கரவாத நிதி, பணமோசடி தடுப்பில் கண்காணிக்கிறது. இந்தியா 2000-ல் உறுப்பினரானது. இந்த அறிக்கை, இந்தியாவின் அமலாக்கத்துறையை 'உலக சூப்பர் ஹீரோ' போல உயர்த்தியுள்ளது. ஊழல் செய்பவர்களுக்கு இது எச்சரிக்கை மணி. இந்தியாவின் சட்ட அமைப்பு, உலகுக்கு வழிகாட்டியாக மாறியுள்ளது!

இதையும் படிங்க: சூடு பிடிக்கும் SIR பணிகள்... ஒரே இடத்தில் கூடிய தென் மாவட்ட ஆட்சியர்கள்... தேர்தல் அதிகாரிகள் தீவிர ஆலோசனை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share