×
 

அரசு பள்ளியில் சரியும் மாணவர்கள் சேர்க்கை! தலைமை ஆசிரியர்கள் சொன்ன அதிர்ச்சி காரணம்! அமைச்சரிடம் புகார்!

'கழிப்பறைகள் சுத்தமாக இல்லாதது, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவதற்கு முக்கிய காரணமாக உள்ளது' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம், மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

கழிப்பறைகள் சுத்தமாக இல்லாதது, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவதற்கு முக்கிய காரணமாக உள்ளது என்று மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் சார்பில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆசிரியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 80க்கும் மேற்பட்ட சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் முன்னுரிமை அடிப்படையில் பிரிக்கப்பட்டு, அவற்றின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாக தெரிவித்தார். பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு உரிய முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: "உயர்கல்வித் துறையில் இனி லஞ்சம் இருக்காது".. 60 நாட்களில் புதிய மாற்றங்கள்! அமைச்சர் விஸ்வநாதன் அதிரடி!

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழக பொதுச்செயலர் ஞானசேகரன், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவதற்கு கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளின் குறைபாடுகள் முக்கிய காரணமாக இருப்பதாக தெரிவித்தார்.

அவர் கூறுகையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலைப் பள்ளிகளில் சுமார் 55 லட்சம் மாணவர்கள் படித்து வந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 45 லட்சமாக குறைந்துள்ளதாக குறிப்பிட்டார். மாணவர்களை அரசு பள்ளிகளில் தொடர்ந்து ஈர்க்க தேவையான வசதிகளை மேம்படுத்துவது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

இதனிடையே, பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் அமைச்சரிடம் முன்வைத்தன.

தமிழ்நாடு பார்வையற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பில் திவாகர் பேசுகையில், பார்வையற்ற ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதில் உள்ள சிரமங்களை எடுத்துரைத்தார். அவர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீட்டை பரிசீலிக்க வேண்டும் என்றும், பாடநூல்கள் வெளியிடப்படும் போதே பார்வையற்றோருக்கான பிரெய்லி புத்தகங்களும் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், பிரெய்லி பாடநூல்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. நாளை முதல் கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்.. முக்கிய அறிவிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share