×
 

ஊறுகாய் மாமினு கூப்ட்டாலும் பரவாயில்ல! GST விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் உரை

ஜிஎஸ்டியால் மக்களுடன் சேர்ந்து மாநிலங்களுக்கும் பயன் கிடைத்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி முதல் அமலுக்கு வரவிருக்கும் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் (GST 2.0) என அழைக்கப்படும் இந்த புதிய சீர்திருத்தங்கள், பிரதமர் நரேந்திர மோடியின் 79வது சுதந்திர தின உரையில் அறிவிக்கப்பட்டவை. இவை பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ஆதரவளிக்கவும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

தற்போதைய ஜிஎஸ்டி அமைப்பில் 5%, 12%, 18% மற்றும் 28% என நான்கு முக்கிய வரி அடுக்குகள் உள்ளன. இவை மிகவும் சிக்கலானவை எனக் கருதப்பட்டு, புதிய சீர்திருத்தங்களின் மூலம் இரண்டு முக்கிய அடுக்குகளாக (5% மற்றும் 18%) குறைக்கப்பட உள்ளன. இதனால், 12% அடுக்கில் உள்ள 99% பொருட்கள் 5% அடுக்கிற்கும், 28% அடுக்கில் உள்ள 90% பொருட்கள் 18% அடுக்கிற்கும் மாற்றப்படும். இந்த மாற்றம், பொருட்களின் விலையைக் குறைத்து, பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும். மேலும், புகையிலை, பான் மசாலா, சர்க்கரை கலந்த கார்பனேற்றப்பட்ட பானங்கள், ஆடம்பர கார்கள் போன்ற பொருட்கள் மற்றும் ஆடம்பர பொருட்களுக்கு 40% என்ற புதிய வரி அடுக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்த நிலையில், ஜிஎஸ்டி வரி சீர்திருத்தங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டியால் மக்களுடன் சேர்ந்து மாநிலங்களுக்கும் பயன் கிடைத்துள்ளது என்றும் மாநிலங்களுடன் சேர்ந்துதான் வரி சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது என்றும் கூறினார்.

இதையும் படிங்க: இட்லி, தோசை பிரியர்களுக்கு ஷாக்.. 5% ஜிஎஸ்டி தொடருமாம்.. CBIC விளக்கம்..!!

ஒட்டுமொத்தமாக 22.08 கோடி ரூபாய் மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி மூலம் வருவாய் கிடைத்துள்ளது என்று தெரிவித்தார். 2017 ஆம் ஆண்டு 65 லட்சம் மக்கள் ஜிஎஸ்டியில் இணைந்தார்கள் என்றும் தற்போது 1.51 கோடி மக்கள் ஜிஎஸ்டியில் உள்ளதாகவும் தெரிவித்தார். தன்னை ஊறுகாய் மாமி என அழைத்தாலும் பரவாயில்லை என்று அவர் கூறினார்.

இதையும் படிங்க: பாராட்டு மடலில் தமிழக நிதி கேட்டு ஒருவரை கூட எழுதலையே? இபிஎஸ்க்கு தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share