×
 

தென்கொரியா கார் தொழிற்சாலையில் தீ விபத்து! உடல்கருகி 10 பேர் பலி! 4 பேர் மாயம்! 40 பேர் காயம்!

தென் கொரிய கார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ பற்றிய சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மாயமான 4 பேரை தேடும் பணி முழு வீச்சில் நடக்கிறது.

தென் கொரியாவின் டேஜியோன் நகரில் உள்ள ஒரு கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ள சோக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 4 பேர் இன்னும் மாயமாக உள்ளனர். அவர்களைத் தேடும் மீட்புப் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

கிழக்கு ஆசியாவின் தொழில்துறை நகரங்களில் ஒன்றான டேஜியோனில் அமைந்துள்ள இந்தத் தொழிற்சாலையில் தீ பற்றியது தெரியவந்ததும், தீயணைப்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். நீண்ட நேரம் தீயுடன் போராடிய பின்னரே தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிந்தது. தீ பற்றிய சமயத்தில் தொழிற்சாலையில் சுமார் 170 தொழிலாளர்கள் பணியில் இருந்துள்ளனர்.

இந்த விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 59 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 25 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இதையும் படிங்க: நொய்டா தொழிற்சாலையில் அதிகாலையில் தீ விபத்து!! சிக்கிக் கொண்ட தொழிலாளர்கள்!! மீட்பு பணி தீவிரம்!!!

தீயை அணைக்கச் சென்ற தீயணைப்பு வீரர்களால் உடனடியாக தொழிற்சாலைக்குள் நுழைய முடியாததே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கட்டடம் இடிந்து விழும் அபாயம் இருந்ததால், மீட்புப் பணிகள் தாமதமானதாகக் கூறப்படுகிறது. தீ ஏற்பட்டதற்கான உண்மையான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. விபத்து குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.

தென் கொரிய அதிபர் லீ ஜே-மியுங் இந்த சம்பவத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு, மீட்புப் பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மாயமான 4 பேரையும் உயிருடன் மீட்கும் நம்பிக்கையில் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த தீ விபத்து தென் கொரியாவின் தொழில்துறை பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மீண்டும் கேள்வியை எழுப்பியுள்ளது. குறிப்பாக, பெரிய தொழிற்சாலைகளில் தீ பாதுகாப்பு அமைப்புகள் போதுமானதாக இல்லை என்பது இந்த சம்பவத்தின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தை இந்த சோகம் மீண்டும் நினைவூட்டுகிறது. 

இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல்... தொகுதி பங்கீட்டில் இழுபறி..! மார்க்சிஸ்ட் கட்சி அவசர ஆலோசனை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share