×
 

28 மணி நேரம்.. 418 கி.மீ. பயணம்.. சர்வதே விண்வெளி நிலையம் சென்றடைந்தார் சுபான்ஷு சுக்லா..!

'டிராகன்' விண்கலம் 28 மணி நேரத்தில் 418 கி.மீ. பயணித்து சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்துள்ளது.

பலகட்ட தாமதங்களுக்குப் பிறகு, திட்டமிட்டபடி பால்கன்-9 ராக்கெட் மூலம் நேற்று நண்பகல் 12.01 மணிக்கு இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா குழு விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டது. இந்த பணி முதலில் மே 29 அன்று தொடங்க திட்டமிடப்பட்டு ஜூன் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக ஏவுதல் ஜூன் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் மூன்றாவது முறையாக மோசமான வானிலை காரணமாக இந்த பயணம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இதனையடுத்து இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் குழு வரும் 19ம் தேதி விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்வதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் அந்த பயணமும் ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து 5வது முறையாக அறிவிக்கப்பட்ட 22ம் தேதியும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட, இறுதியாக 6வது முறையாக ஆக்சியம் 4 திட்டம் ஜூன் 25ம் தேதி செயல்படுத்தப்படும் என நாசா நிறுவனம் அறிவித்தது. 

இதையும் படிங்க: மீண்டும் மீண்டுமா? இதுக்கு இல்லையா சார் எண்டு? சுபான்ஷு சுக்லா விண்வெளி பயணத்தில் புது சிக்கல்..!

அதன்படி இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேர் நேற்று இந்திய நேரப்படி பிற்பகல் 12.01 மணிக்கு தங்களது விண்வெளி பயணத்தை தொடங்கினர். புளோரிடாவில் இருந்து பால்கன் 9 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. 

இத்திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவைச் சேர்ந்த மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு மற்றும் போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று, இரண்டு வாரங்கள் தங்கி ஆய்வு செய்கின்றனர்.   

இதில் இந்தியாவுக்காக 7 ஆய்வுகளை செய்கிறார் சுபான்ஷூ சுக்லா. ஏற்கனவே ஐந்து முறை இந்த பயணம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது பால்கன் ராக்கெட் மூலம் இன்று விண்வெளிக்கு திட்டமிட்டப்படி இந்த பயணம் அமைந்துள்ளது. 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியர் ஒருவர் விண்வெளி பயணம் மேற்கொள்கிறார் என்ற பெருமையை பெற்றுள்ளார் சுபான்ஷூ சுக்லா.

மேலும் இவர் பாசிப்பயறு, வெந்தயத்தை முளைக்க வைத்து ஆய்வு செய்கிறார். சுக்லா மேற்கொள்ளும் மற்றொரு முக்கிய ஆராய்ச்சி, விண்வெளியில் உண்ணக்கூடிய நுண்ணுயிர் பாசிகளின் மீது நுண் ஈர்ப்பு கதிர்வீச்சின் தாக்கம். ஈர்ப்பு விசை இல்லாத நிலையில் இந்த நுண்ணுயிரிகள் எவ்வாறு வளர்கின்றன என்பதை அவர் ஆய்வு செய்வார்.

இந்நிலையில் சுமார் 28 மணி நேர பயணத்திற்கு பிறகு, 'பால்கன் 9' ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட 'டிராகன்' விண்கலம் 418 கி.மீ. பயணித்து சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்துள்ளது. இதனை தொடர்ந்து 'டிராகன்' விண்கலம் தற்போது விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளி நிலையம் சென்ற இந்தியர் என்ற சாதனையை சுபான்ஷு சுக்லா படைத்துள்ளார்.

 

இதையும் படிங்க: சீறிப் பாய்ந்தது ஃபால்கன் 9 விண்கலம்.. விண்வெளிக்கு புறப்பட்டார் சுபான்ஷு சுக்லா!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share