×
 

இதெல்லாமா விண்வெளிக்கு எடுத்துட்டு போவீங்க..! சுபான்ஷு சுக்லா கொண்டு செல்லும் ரகசிய பொருள்..!

ராகேஷ் ஷர்மாவுக்கு சிறப்புப் பரிசு ஒன்றை தர விரும்புவதாக தெரிவிக்கும் சுக்லா, அப்பொருளை விண்ணுக்கு எடுத்துச் சென்று, பூமிக்குத் திரும்பிய பிறகு தர இருப்பதாக தெரிவித்தார். தற்போது அது என்ன பொருள் என்பது ரகசியம் என்றும் அவர் கூறினார்.

'நாசா' எனப்படும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் இணைந்து, 2025ல், ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4 என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்ப உள்ளது.

இதில், இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட அமெரிக்கா, ஹங்கேரி, போலந்து நாடுகளைச் சேர்ந்த நான்கு பேர் செல்கின்றனர். இக்குழு, அங்கு 14 நாட்கள் தங்கி ஆய்வு நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து, பால்கன் 9 ராக்கெட் வாயிலாக நாளை (ஜூன் 10) இக்குழு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்குழு, வரும் 11ம் தேதி இரவு 10:00 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றடையக்கூடும் என, எதிர்பார்க்கப்படுகிறது என்று, நாசா அறிவித்துள்ளது. சுபன்ஷூ சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான தனது முதல் பயணத்திற்கான இறுதிக் கட்டத்தில் தயாராகி வருகிறார். இன்று (ஜூன் 09) சுபன்ஷூ சுக்லா குழுவினர் ஒத்திகை நடத்தினர்.

இதையும் படிங்க: தேதி குறிச்சாச்சு.. இந்த டைம் மிஸ் ஆகாது! விண்வெளியில் தடம் பதிக்க காத்திருக்கும் இந்திய வீரர்..!

கடந்த 40 ஆண்டுகளில் இந்த நாடுகளில் இருந்து யாரும் விண்வெளிக்கு சென்றதில்லை. ஆக்ஸியம் 4 திட்டத்தின் கமாண்டராக இருக்கும் பெக்கி விட்சனுக்கு இது ஐந்தாவது விண்வெளி பயணமாகும். அவர் இதற்கு முன்பு இரண்டு முறை சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றுள்ளார். நூறு நாட்களுக்கும் மேலாக அங்கே இருந்த அவர் 10 முறை விண்வெளி நடை மேற்கொண்டிருக்கிறார்.

41 ஆண்டுகளுக்கு பின் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெற உள்ளார். இதற்கு முன், 1984ல் ரஷ்யாவின் சோயுஸ் திட்டத்தின்கீழ், இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா, விண்வெளிக்கு பயணம் செய்தார். ஆக்ஸியம் வேர்ல்ட் மீடியாவுக்கு அளித்த பேட்டியில், ராகேஷ் சர்மாவைப் பார்த்து தான் விண்ணுக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதாகக் சுபான்ஷு சுக்லா கூறினார்.

சிறு வயது முதலே விண்ணுக்குச் செல்ல வேண்டும் என்ற கனவு இருந்ததாகவும் அவர் தெரிவிக்கிறார். ராகேஷ் ஷர்மாவுக்கு சிறப்புப் பரிசு ஒன்றை தர விரும்புவதாக தெரிவிக்கும் சுக்லா, அப்பொருளை விண்ணுக்கு எடுத்துச் சென்று, பூமிக்குத் திரும்பிய பிறகு தர இருப்பதாக தெரிவித்தார். தற்போது அது என்ன பொருள் என்பது ரகசியம் என்றும் அவர் கூறினார்.

தொழில்நுட்பம் சார்ந்த பொருட்கள் மட்டுமின்றி அவர்களுக்கு பிடித்த உணவுகளையும் விண்வெளிக்கு இந்த வீரர்கள் எடுத்துச் செல்கின்றனர். சுக்லா மாம்பழச்சாறு, பருப்பு அல்வா மற்றும் கேரட் அல்வா போன்றவற்றை எடுத்துச் செல்வதாக கூறினார்.

இந்த உணவுகளை அவர்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் இதர விண்வெளி வீரர்களோடு பகிர்ந்து கொள்வார்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்வது மிகவும் அற்புதமான பயணம். நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷூ சுக்லா மகிழ்ச்சி தெர்வித்தார்.

இதையும் படிங்க: தேதி குறிச்சாச்சு.. இந்த டைம் மிஸ் ஆகாது! விண்வெளியில் தடம் பதிக்க காத்திருக்கும் இந்திய வீரர்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share