×
 

போர் நிறுத்தமா? அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையே கிடையாது?! முரண்டு பிடிக்கும் ஈரான்!

போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் எந்த விதமான பேச்சும் நடத்தப்போவதில்லை என ஈரான் பாதுகாப்பு துறை அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேற்காசியாவில் (மத்திய கிழக்கில்) அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் உறுதியாக அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தாது என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது. 

ஈரான் உயர் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி, அமெரிக்க ஊடகங்கள் கூறிய "பேச்சு தொடங்கியது" என்ற தகவலை மறுத்து, "அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்" என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ஈரான் பாதுகாப்பு துறை அதிகாரிகளும் இதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் ராணுவம், புரட்சிகர காவல்படை (IRGC), போலீஸ் ஆகியோர் ஆயுதங்களை கீழே போட்டு சரணடைய வேண்டும் என்று எச்சரித்திருந்தார். "இல்லையெனில் மரணம்" என்றும், ஈரானுடன் பேச்சு நடத்த தயார் என்றும் கூறியிருந்தார். ஆனால் ஈரான் இதை கடுமையாக நிராகரித்துள்ளது. கமேனி கொலைக்குப் பிறகு ஈரான் பதிலடி தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது.

இதையும் படிங்க: ஈரானை நொறுக்கும் அமெரிக்கா! உள்ளே வரும் ரஷ்யா! போரை நிறுத்துங்க!! புடின் மாஸ் எண்ட்ரி!!

குவைத்தில் ஈரான் ராணுவம் அமெரிக்க எப்-15 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது. விமானம் செல்போன் டவர் மீது மோதி விழுந்தது. அதிர்ஷ்டவசமாக விமானி உயிர் தப்பினார். இது போரில் ஈரானின் முதல் பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.

குவைத் மீது ஈரான் 3வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. துபாய், அபுதாபி, தோஹா நகரங்களில் ஏவுகணை வெடிப்பு சத்தங்கள் அதிர்கின்றன. இதனால் துபாய், அபுதாபி, குவைத் விமான நிலையங்கள் முழுமையாக முடங்கியுள்ளன.

மேலும், ஈரான் இன்று சைப்ரஸ் நாட்டின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது. அங்குள்ள பிரிட்டன் விமானப்படை தளமான அக்ரோடிரி (RAF Akrotiri) மீது ஏவுகணை வீசியது. லேசான சேதம் ஏற்பட்டுள்ளதாக சைப்ரஸ் அரசு தெரிவித்துள்ளது. இது போரின் தாக்கம் ஐரோப்பா வரை பரவியுள்ளதை காட்டுகிறது. பிரிட்டன் அமெரிக்காவுக்கு ஆதரவாக தளங்களை பயன்படுத்த அனுமதித்ததற்கு பதிலடியாக இது நடந்ததாக கருதப்படுகிறது.

இந்த தாக்குதல்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தை மேலும் கொந்தளிப்புக்கு உள்ளாக்கியுள்ளன. யுஏஇ, குவைத், சவுதி போன்ற நாடுகளில் உள்ள லட்சக்கணக்கான இந்தியர்களின் பாதுகாப்பு கவலைக்குரியதாக உள்ளது.

விமான சேவை ரத்து, வர்த்தகம் பாதிப்பு போன்றவை பெரும் சவாலாக உள்ளன. பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அமைதி வலியுறுத்தி வருகின்றனர். போர் தொடர்ந்தால் உலக பொருளாதாரம், எண்ணெய் விலை பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. விரைவில் உரையாடல் மூலம் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதையும் படிங்க: ரத்த வெறி கொண்ட பயங்கரவாத ஆட்சி! ஆயுதங்களை கீழ போடுங்க!! ஈரானை எச்சரிக்கும் அதிபர் ட்ரம்ப்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share