அமெரிக்க எண்ணெய் கப்பல் மீது பயங்கர தாக்குதல்!! பழிக்கு பழி தீர்க்கும் ஈரான்!! அதிகரிக்கும் பதற்றம்!
வளைகுடாவில் அமெரிக்க எண்ணெய் கப்பலை ஏவுகணையால் தாக்கியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
வளைகுடா பகுதியில் அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. நடுக்கடலில் தீப்பிடித்து எரியும் அந்த கப்பலின் படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த தாக்குதலில் கப்பலில் இருந்தவர்களின் நிலை குறித்து இதுவரை எந்த உறுதியான தகவலும் வெளியாகவில்லை.
இந்தியப் பெருங்கடலில் இலங்கை கடற்கரை அருகே ஈரானின் போர்க்கப்பல் 'டீனா'வை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் டார்பிடோ மூலம் மூழ்கடித்த சம்பவத்துக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'டீனா' கப்பல் தாக்குதலில் 130 மாலுமிகளில் 87 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூரச் செயலுக்கு அமெரிக்கா நிச்சயம் வருத்தப்பட வேண்டியிருக்கும் என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி சில மணி நேரங்களுக்கு முன்பு எச்சரித்திருந்தார். அவரது எச்சரிக்கைக்கு சில மணி நேரங்களிலேயே இந்த பதில் தாக்குதல் நடந்துள்ளது.
இதையும் படிங்க: ஈரான் தாக்குதலில் இந்தியர் 3 பேர் பலி!! 20 பேர் காயம்!! எண்ணெய் டேங்கர் கப்பலை சுக்குநூறாக்கிய ட்ரோன்!!
வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பல் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணை அல்லது க்ரூஸ் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியதாக ஈரான் ராணுவ ஊடகங்கள் அறிவித்துள்ளன. தாக்குதலுக்குப் பிறகு கப்பல் தீப்பிடித்து எரிவதாகவும், புகை மண்டலம் கடலை மூடியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பலில் இருந்த குழுவினரின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் நிலை குறித்து அமெரிக்கா அல்லது ஈரான் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை. இருப்பினும், கப்பல் பெரிய அளவில் சேதமடைந்து, எண்ணெய் கசிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக கடல் சூழல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த தாக்குதல் 'ஆபரேஷன் எபிக் ஃப்யூரி' என்ற பெயரில் அமெரிக்கா - இஸ்ரேல் நடத்தி வரும் ஈரான் எதிர்ப்பு போருக்கு பதிலடியாக நடந்துள்ளது. ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால் ஏற்கனவே உலக எண்ணெய் சந்தை பதற்றத்தில் உள்ளது. இப்போது அமெரிக்க எண்ணெய் கப்பல் தாக்கப்பட்டதால் எண்ணெய் விலை மேலும் உயரும் அபாயம் உள்ளது. இந்தியா உட்பட ஆசிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் வரத்து மேலும் பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இரு தரப்பும் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதால் மத்திய கிழக்கு முழுவதும் போர் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. ஈரான் தனது பதில் தாக்குதல்களை தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக நாடுகள் இந்த நெருக்கடியை உற்று நோக்கி வருகின்றன.
இதையும் படிங்க: இந்த கொடூர செயலுக்கு நிச்சயம் வருத்தப்படுவீங்க!! போர்கப்பல் மீது தாக்குதல்!! அமெரிக்காவுக்கு ஈரான் வார்னிங்!!