×
 

அமெரிக்கா - ஈரான் அமைதி பேச்சுவார்த்தை நிறுத்தம்! இஸ்ரேல் தாக்குதலால் வந்தது வினை!

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைக் கண்டித்து, அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையைநிறுத்திவைத்ததாக ஈரான் அறிவித்தது.

லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்கள் மத்திய கிழக்கில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளன. இந்த சூழலில், இஸ்ரேல் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்காவுடன் நடைபெற்று வந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் புதிய ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக லெபனானில் பதற்றமான சூழல் நீடித்து வருகிறது. இஸ்ரேலின் இந்த நடவடிக்கைகள் பிராந்திய அமைதிக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக பல தரப்புகள் கவலை தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசியதாக தெரிவித்துள்ளார். அந்த உரையாடலின் போது பெய்ரூட் மீது பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்த வேண்டாம் என்று வலியுறுத்தியதாக அவர் கூறினார். இதையடுத்து இஸ்ரேல் தனது சில ராணுவ நடவடிக்கைகளை கட்டுப்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: ஈரான் மீது அமெரிக்கா அட்டாக்..!! பதிலடியாக குவைத் மீது பாய்ந்த ஈரான் ஏவுகணைகள்..!!

மேலும், ஹிஸ்புல்லா அமைப்பின் பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். அந்த பேச்சுவார்த்தையின் மூலம் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா தரப்புகள் ஒருவர்மீது ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்துவதை நிறுத்த ஒப்புக்கொண்டதாக அவர் கூறினார். இந்த போர் நிறுத்தம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெரியாத நிலையில், அது நீண்டகால அமைதிக்கான தொடக்கமாக அமைய வேண்டும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

இதற்கிடையே, ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் வேகமாக முன்னேறி வருவதாக டிரம்ப் கூறியுள்ளார். ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கடல்வழிப் போக்குவரத்தை மீண்டும் முழுமையாக செயல்படுத்தும் நோக்கில் முக்கிய ஒப்பந்தம் ஒன்றை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தேவையான சில அம்சங்களில் இன்னும் உடன்பாடு எட்டப்பட வேண்டியிருந்தாலும், அடுத்த வாரத்திற்குள் ஈரானுடன் முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்ற நம்பிக்கையை அவர் வெளியிட்டுள்ளார். இதனால் மத்திய கிழக்கின் அரசியல் சூழல் அடுத்த சில நாட்களில் எந்த திசையில் நகரும் என்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க: ஈரானின் கச்சா எண்ணெய்யை வாங்கினால் இதுதான் நடக்கும்..!! அமெரிக்கா வார்னிங்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share