ஈரானை தொடர்ந்து இஸ்ரேலை தாக்கும் ஏமன்..! மேற்கு ஆசியாவில் ஓயாத மரண ஓலம்!!
ஹவுதி அமைப்பினர் இஸ்ரேலில் மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். அந்த ஏவுகணைகள் அனைத்தையும் சுட்டு வீழ்த்திவிட்டதாக தெரிவித்துள்ள இஸ்ரேல் ராணுவம் பதிலுக்கு ஏமனுக்குள் புகுந்து தாக்கி வருவதாக கூறி உள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மீது, காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, 2023ம் ஆண்டு அக்டோபரில் தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து, ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து, துல்லிய தாக்குதல்கள் நடத்தி, இஸ்ரேல் படைகள் கொன்று வருகின்றன. காசாவை கையில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் தீவிர போரில் ஈடுபட்டுள்ளது. 2023 அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலில் புகுந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய கொடிய தாக்குதலில் அப்பாவி மக்கள் 1200 பேர் கொல்லப்பட்டனர்.
250 பேரை பிணைக்கைதிகளாக பயங்கரவாதிகள் பிடித்து சென்றனர். பதிலடி கொடுக்கவும், பிணைக்கைதிகளை மீட்கவும் தான் காசாவில் போரை துவங்கியது இஸ்ரேல். டிரம்ப் அதிபரானதும் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. ஏராளமான பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
ஆனால் எல்லா பயங்கரவாதிகளையும் ஒரே நேரத்தில் விடுவிக்க ஹமாஸ் மறுத்ததால் 60 நாட்களில் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது. இதனால் தான் 2 மாதம் முன்பு மீண்டும் காசாவில் போரை துவங்கியது இஸ்ரேல்..
இதையும் படிங்க: போர் நிறுத்தத்தை மீறி லெபனானில் குண்டுமழை.. மீண்டும் மோதலில் இஸ்ரேல் - ஈரான்..!
ஏமனின் வடமேற்கு பகுதி மற்றும் தலைநகர் சனாவை ஹவுதி பயங்கரவாத அமைப்பினர் ஆட்சி செய்து வருகின்றனர். அவர்களுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. பாலஸ்தீன பகுதியான காஸாவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கு ஹவுதி அமைப்பினர் நண்பர்கள்.
இரு அமைப்பினரும் சேர்ந்து 2023 அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி பலரைக் கொன்றனர். மேலும் பலரை பணயக் கைதிகளாக பிடித்து வந்தனர். அப்படிப்பட்ட ஹவுதி அமைப்பினர், ஈரானுக்கு ஆதரவாக இப்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கடந்த மே மாதம் முதல் அவ்வப்போது இஸ்ரேல் மீது அவர்கள் ஏவுகணை தாக்குதலை நடத்துவதால், இஸ்ரேலும் பதிலடியாக ஏமன் நாட்டின் விமான நிலையம், துறைமுகங்களை தாக்கி வருகிறது. ஹவுதி அமைப்பினரின் பெரும்பாலான தாக்குதல்களை இஸ்ரேல் முறியடித்துள்ளது.
பதிலுக்கு ஏமன் தலைநகர் சனா போன்ற பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹவுதி அமைப்பினர் இஸ்ரேலில் மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். அந்த ஏவுகணைகள் அனைத்தையும் சுட்டு வீழ்த்திவிட்டதாக தெரிவித்துள்ள இஸ்ரேல் ராணுவம் பதிலுக்கு ஏமனுக்குள் புகுந்து தாக்கி வருவதாக கூறி உள்ளது.
இஸ்ரேலின் தாக்குதல்கள் தங்களுடைய காஸா ஆதரவு நிலைப்பாட்டை மாற்றாது என்று ஹவுதி அமைப்பின் தலைவர் அப்துல்-மாலிக் அல்-ஹவுதி, கூறியுள்ளார். காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலை நிறுத்தப்படும் வரை எங்கள் தாக்குதல்கள் தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: காமெனியை சாவுல இருந்து காப்பாத்தினேன்.. ஆனா அவருக்கு நன்றியே இல்லை.. கொந்தளிக்கும் ட்ரம்ப்..!