ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு.. இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!
ஈரான் தலைவர் அயதுல்லா அலி கொமெனியை கொல்லுவது தான் மோதலை முடிவுக்கு கொண்டு வரும் தீர்வு என இஸ்ரேல் பிரதமர் பேசி இருப்பது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இஸ்ரேல் - ஈரான் இடையிலான மோதல் அதிகரித்து வருகிறது. மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவதால் போர்க்களமாக காட்சியளிக்கிறது. இந்த நிலையில், ஈரான் நாட்டின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கொமெனியை கொல்வது மட்டுமே இரு நாடுகளுக்கும் இடையேயான மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஈரானின் அணு ஆயுத முயற்சி உலகிற்கு அச்சுறுத்தலாக அவர் அச்சுறுத்தலாக உள்ளதாகவும், மோதலை முடிவுக்குக் கொண்டு வருவது தான் இஸ்ரேலின் நோக்கம் என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!
ஈரான் தலைவரை கொலை செய்வது பற்றி இப்படி பேசுவது முதல்முறை அல்ல. அவரை கொல்லும் திட்டம் கூட லிமிட்டில் இல்லாமல் போகவில்லை என்பது போல இஸ்ரேல் அதிகாரி ஒருவர் ஏற்கெனவே பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இஸ்ரேலை சிதைத்து விடுவோம்... ஈரானுடன் கைகோர்த்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்!