இன்னும் 35 ஆண்டுகளில், அதாவது 2060-ல் உலகம் அழியுமா? விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன் கணிப்பு பற்றி பரபரப்பான தகவல்கள்
உலக அழிவு நாள் குறித்த ஐசக் நியூட்டனின் அறிக்கை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இயக்கம் மற்றும் ஈர்ப்பு விசை விதிகளை வகுப்பதில் அறிஞரான சர் ஐசக் நியூட்டன், 1204 ஆம் ஆண்டு எழுதிய ஒரு கடிதத்தில் "இன்னும் 35 ஆண்டுகளில், அதாவது, வருகிற 2060 ஆம் ஆண்டில் உலகம் அழியும் என்று கணித்து இருந்தார். அவருடைய 'இறுதி நாள் தீர்க்கதரிசன"த்தை பைபிளின் புராட்டஸ்டாண்ட் விளக்கம் மற்றும் விவிலிய வரலாற்றை தொடர்ந்து நடந்த நிகழ்வுகள்; குறிப்பாக "அர்மெகே தான் போர்"ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இதை எழுதி இருக்கிறார்.
அவருடைய இந்த கணிப்பு குறித்து "யூ. எஸ். சன்" பத்திரிகையில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது. இந்த கணிப்பு பற்றி ஹாலிபாக் பல் கழகத்தின் கிங்ஸ் கல்லூரி பேராசிரியர் ஆன டி.ஸ்னோபெலன், பைபிளில் உள்ள டேனியல் புத்தகத்தில் காணப்படும் தேதிகளை பயன்படுத்தி, உலக முடிவை கணக்கிடுவதன் மூலம் இந்த கோட்பாடு உருவாக்கப்பட்டு இருப்பதாகவும், அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இலங்கை துணை தூதரகத்திற்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றம்..
நியூட்டன் மதத்திற்கும் அறிவியலுக்கும் இடையே ஒரு தடையை காணவில்லை என்றும், தனது வாழ்நாள் முழுவதும் கடவுளின் உண்மையை கண்டறிய உழைத்தார் என்றும் அவர் கூறினார். நியூட்டன், தான் கண்டுபிடித்த கால்குலஸ் போன்ற சிக்கலான எதையும் பயன்படுத்தவில்லை என்றும், அதற்கு மாறாக ஒரு குழந்தையால் செய்யக்கூடிய எளிய கணிதத்தை பயன்படுத்தினார் என்றும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் நியூட்டன் தனது சொந்த கணிப்பை நம்பினாரா என்றால் அதுவும் முழுமையாக நம்பவில்லை என்று தான் புரிந்து கொள்ள முடிகிறது. அதே நேரத்தில் அவசரமான கணிப்புகளை அவர் எச்சரித்திருக்கிறார். மேலும் உலக இறுதி நேரம் கடவுளுக்கு மட்டுமே தெரியும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு என்ன நடக்கப்போகிறது தெரியுமா?: இது போன்ற அழிவு நாள் கணிப்புகளை சர் ஐசக் நியூட்டன் மட்டுமல்ல, கடந்த 1500 - களில் வாழ்ந்த பிரபல பிரெஞ்சு ஜோதிட அறிஞரான நோஸ்ட்ரா டாமஸ் என்பவர் வெளியிட்ட கணிப்புகளும் கடந்த காலங்களில் அவ்வப்போது நம்மை பயமுறுத்திச் சென்றதை நினைவு கூற முடிகிறது.
அவருடைய கணிப்புகளில் ஒன்று: 2025 - வது ஆண்டில் அதாவது இந்த ஆண்டில் தான் ஒரு சிறிய கோள் பூமியுடன் மோதக் கூடும்; அல்லது பூமியின் ஆபத்தான அருகாமையில் வரக்கூடும் என்பது தான் அது! இந்த தகவலை எழுதிக் கொண்டிருக்கும் எனது அரை நூற்றாண்டு கால நினைவுகளில், நான் குழந்தை பருவத்தில் இருந்தபோதே உலகம் அழியப்போகிறது என்ற வதந்தி காட்டுத் தீ போல் பரவியதைஎன்னால் நினைவுபடுத்த முடிகிறது.
அப்போது கிராமத்திலிருந்து எங்கள் தொடக்க பள்ளியின் ஒன்றாம் வகுப்பு ஆசிரியை அவர்கள் வீட்டு பக்கத்தில் உள்ள உறவினர் பையன் ஒருவன், "உலகம் அழியப்போகிறதாமே.. ஐயையோ நான் இன்னும் கல்யாணம் பண்ணி பார்க்கலையே!" என்று அழுதபடி இருந்ததை, அவர் நகைச்சுவையோடு கூறியது இன்னும் என்னால் நினைவு கூற முடிகிறது. ஆக, இது போன்ற கணிப்புகளும் அது பற்றிய எச்சரிக்கைகளும் அவ்வப்போது வந்து கொண்டுதான் இருக்கும்.
எத்தனையோ இயற்கை பேரிடர்கள் அவ்வப்போது நடந்த வண்ணம் தான் இருக்கின்றன. பூமி தட்டுகள் உரசும்போது பூகம்பம் மூலம் மிகப்பெரிய பேரழிவுகள் நடைபெறவில்லையா? சுனாமி அலைகள் ஆர்ப்பரித்து எழுந்து வழியில் இறந்தவர்களை எல்லாம் சுருட்டிக் கொண்டு செல்லவில்லையா?நமது வரலாற்றுச் சிறப்புமிக்க லெமூரியா கண்டம் கூட அப்படித்தானே கடலில் மூழ்கி போனது என்பது வரலாறு. எனவே, நடப்பது நடந்து கொண்டே தான் இருக்கும்.. எப்போது எது நடந்தாலும் எதிர்கொள்வோம் என்ற மன உறுதியுடன் நமது வழியில் நாம் போய்க் கொண்டே இருப்போம்..!
இதையும் படிங்க: எட்டாத உயரத்தில் மோடி… சரியும் இண்டியா கூட்டணி… படுபாதாளத்தில் ராகுலின் செல்வாக்கு..!