×
 

பிரதமர் மோடிக்கு பால் அபிஷேகம்; தமிழகத்துக்கு கடும் விமர்சனம்... வைரலாகும் எக்ஸ் தள பதிவு!!

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை பாராட்டி பிரதமர் மோடிக்கு பால் அபிஷேகம் செய்யும் கேரள மக்கள் தமிழகத்தை சாடியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன.  பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி தருவது தொடர்பாக அனைத்து முடிவுகளையும் எடுக்க ராணுவத்திற்குப் பிரதமர் முழுச் சுதந்திரத்தை அளித்திருந்தார். இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது.

இந்த சூழலில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. ஜெய்ஸ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய அமைப்புகள் பயன்படுத்திய முகாம்கள் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளன. மேலும், பாகிஸ்தான் நிலப்பரப்பில் உள்ள 4 முகாம்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 5 முகாம்கள் தாக்கப்பட்டன.

இதையும் படிங்க: மசூத் அசார் தலைமையகம் முதல் பயிற்சி கூடம் வரை... வாஷ் அவுட் ஆக்கிய இந்திய ராணுவம்..!!

பஹவல்பூர் (ஜெய்ஸ்-இ-முகமது தலைமையகம்), முரிட்கே (லஷ்கர்-இ-தொய்பா பயிற்சி முகாம்), கோட்லி (தற்கொலை தாக்குதல் பயிற்சி முகாம்), முசாபராபாத் (இறக்குமதி முகாம்), பர்னாலா (லஷ்கர் ஆதரவு முகாம்), சியால்கோட் (ஹிஸ்புல் முஜாஹிதீன் பயிற்சி முகாம்) ஆகியவை இந்த தாக்குதலில் குறிவைக்கப்பட்டுள்ளன.  இந்த தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  இந்த தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசின் இந்த துணிச்சலான செயலுக்கு அனைத்து மாநிலங்களும் அரசியல் கட்சி தலைவர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பல்வேறு நாட்டு தலைவர்களும் பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கேரளா மாவட்டம் கொல்லம் மாவட்டத்தில் அப்பகுதி மக்கள் பிரதமர் மோடியின் செயலை பாராட்டி அவரது படத்திற்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்தனர். மேலும் அவர்கள் தமிழகத்தையும் சாடியுள்ளனர். அதாவது கூத்தாடிகளுக்கு (சினிமா நடிகர்களுக்கு) பால் அபிஷேகம் செய்யும் முட்டாள்கள் என்று குறிப்பிட்டு எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளனர். அதில், பிரதமர் மோடியின் படத்திற்கு பல் அபிஷேகம் செய்கின்றனர்.

இதையும் படிங்க: தாக்குதலுக்கு அடங்காத பாக்., எல்லையில் அத்துமீறி தாக்குதல்.. பலியான அப்பாவி மக்கள்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share