தலைமுடியால் கழுத்தை இறுக்கி கொலை..! வெறிநாய் குதறியது போல இருக்கு... உறவினர்கள் வேதனை..!
வெறி நாய் குதறியது போல குழந்தையை சிதைத்து இருக்கிறார்கள் என்று கோவை சிறுமி கொல்லப்பட்ட விவகாரம் குறித்து உறவினர்கள் வேதனையுடன் கூறினார்.
வெறி கொண்ட நாய் குதறியது போல குழந்தையை சிதைத்து விட்டார்கள் என கோவையில் கொல்லப்பட்ட சிறுமியின் உறவினர்கள் வேதனையை வெளிப்படுத்தி உள்ளனர். கோவை சூலூர் பகுதியைச் சேர்ந்த லேத் ஒர்க்ஷாப் தொழிலாளி ஒருவரின் 10 வயது மகள், தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அருகிலுள்ள மளிகை கடைக்குச் சென்றுள்ளார். அதன் பின்னர் சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாமல் மயமாகியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால், இதுகுறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார், சிறுமி பாதுகாப்பாக இருப்பதாக பெற்றோரிடம் தொடர்ந்து கூறி வந்ததாகத் தெரிகிறது. ஆனால், அடுத்த சில மணி நேரங்களிலேயே சிறுமி கண்ணம்பாளையம் குளத்தில் சடலமாக மீட்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியானது.
இந்த சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கொல்லப்பட்ட சிறுமியின் உடலை கண்கொண்டு பார்க்க முடியவில்லை என உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். வெறி கொண்ட நாய் குதறியதைப் போல குழந்தையின் உடல் முழுவதும் சிதைந்த நிலையில் கிடைத்துள்ளது என்று கூறினர்.
இதையும் படிங்க: பாட்னா டு கோவை வந்த ரயிலில் கஞ்சா சாக்லெட்... தமிழகத்தில் வேலை காட்ட நினைத்த வடமாநிலத்தவர்கள் கைது...!
குழந்தையின் கை, முகம், கண்கள் என எதுவும் இல்லை என்றும் எல்லாம் முழுவதுமாக சிதைந்துள்ளது என்றும் பெரும் வேதனையை வெளிப்படுத்தினர். குழந்தையின் கழுத்தை முழுவதுமாக திருப்பியும் அவளது தலைமுடியை கொண்டே கழுத்தை நெறித்துள்ளனர் எனவும் கூறியுள்ள உறவினர்கள் குழந்தையின் உடல் முழுவதும் நாய் குதறியது போல் காயம் ஏற்பட்டு இருக்கிறது இன்றும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். குழந்தையை கொடூரமாக கொன்றவர்களை அதே போலவே கொடூரமாக கொல்ல வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கோவை உக்கடம் சந்தையில் முக்கனி வாசம்..! பலாப்பழ சீசன் அமர்க்களம்..!!