ஈரானுக்குள் அடியெடுத்து வைத்த இஸ்ரேல்.. பதுங்குக் குழிக்குள் ஓடி ஒளிந்த 'கொமெனி'!
ஈரான் நாட்டின் உச்ச தலைவராக இருக்கும் அயதுல்லா அலி கொமேனி அவருடைய அவர் குடும்பத்துடன் பாதாள பதுங்கு குழிக்குள் தஞ்சம் அடைந்திருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் தற்போது தீவிரமடைந்திருப்பதால் ஈரானின் மத தலைவராகவும் ஈரான் நாட்டின் உச்ச தலைவராக இருக்கும் அயதுல்லா அலி கொமேனி அவருடைய அவர் குடும்பத்துடன் பாதாள பதுங்கு குழிக்குள் தஞ்சம் அடைந்திருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாலஸ்தீன் ஸ்ட்ரீட் என்ற பயல் தேரானிலே தலைநகர் தெஹ்ரானில் பேலஸ்தீன் தெரு என்ற இடத்தில் அயதுல்லா அலி கொமேனி உடைய இல்லம் இருந்தது. கடந்த இரு தினங்களுக்குள் நடைபெற்ற கொண்டு தாக்குதலின் பொழுது சின்னாபின்னமானது. எனவே அங்கிருந்து அவர் அப்பொழுதே வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. கடைசியாக அவர் கடந்த 13 ஆம் தேதி தான் பொதுவெளியில் தோன்றி நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியின் மூலமாக உரையாற்றினார். அதற்கு பின் அவர் எங்கே இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை. தற்போது அவருடைய மகன் அதாவது கொமேனிக்கு அடுத்தபடியாக பதவிக்கு வரக்கூடியதாக பேசப்படும் அவருடைய மகன் மோதசாபா தன்னுடைய தந்தையுடன் தான் இருக்கிறார் எனக்கூறப்படுகிறது.
தற்போது மகன் மற்றும் குடும்பத்தினருடன் அயதுல்லா அலி கொமேனி எங்கோ ஒரு பதுங்கு குழிக்குள் தஞ்சமடைந்துள்ளதாகவும், அந்த தகவல் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் நாட்டினுடைய தலைசிறந்த விஞ்ஞானிகளான 14 அணுசக்தி விஞ்ஞானிகள் மூன்று ராணுவ தளபதிகள், முக்கியமான ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் . எனவே அயதுல்லா அலி கொமேனியையும் கொன்றுவிட்டால் இந்த போர் கிட்டத்திடம் முடிவுக்கு வந்துவிடும் என்பதால் இஸ்ரேலின் உளவு அமைப்பு அவரைத் தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தொடரும் போர்ப்பதற்றம்.. ஈரான் வாழ் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு..!
ஈரான் உளவுத்துறையின் மிக முக்கியமான தலைவர் முகமது கசாமி கொல்லப்பட்டுள்ளார். அது மட்டுமில்லாமல் கொமேனியின் தனி ஆலோசகராக இருந்த அலிஷங் கமானி தற்போது கொலை செய்யப்பட்டுவிட்டார். எனவே 85 வயதாகும் அயதுல்லா அலி கொமேனியை கொள்வதற்காக தற்கொலை படை வீரர்கள் சிலர் கூட இஸ்ரேலில் இருந்து ஈரானுக்குள் ஊடுருவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடகிழக்கு தெஹ்ரானில் அமைந்துள்ள லாவிசானில் உள்ள ஒரு நிலத்தடி பதுங்கு குழியில் தஞ்சம் புகுந்துள்ளதாக ஈரான் இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் தலைமையகத்தில் இருந்து ஒப்புதல் கிடைத்ததும் அயதுல்லா அலி கொமேனியைக் கொல்ல தற்கொலைப்படை தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கேவலமான ஆட்சி... பாட்டிக்கு கூட பாதுகாப்பு இல்ல...2026ல சம்பவம் இருக்கு! இபிஎஸ் கடும் கண்டனம்