×
 

அதிருப்தி...! தகுதி சான்று புதுப்பிக்கும் கட்டண உயர்வு..! லாரிகள் ஸ்ட்ரைக்...!

லாரிகள் வேலை நிறுத்தம் செய்துள்ளதால் ரேஷன் அரிசியை கொண்டு செல்லும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு நாடு முழுவதும் உள்ள லாரி உரிமையாளர்களை கடுமையாக பாதித்துள்ளது. கனரக வாகனங்களான லாரிகள், பேருந்துகள் போன்றவற்றின் தகுதிச் சான்றிதழ் புதுப்பிக்கும் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளது. இதற்கு முன்பு 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கனரக வாகனங்களுக்கு ரூ.2,500 அல்லது ரூ.3,500 அளவிலான கட்டணமே இருந்தது.

ஆனால் தற்போது, 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களுக்கு ரூ.12,500 ஆகவும், 20 ஆண்டுகளுக்கு மேற்பட்டவற்றுக்கு ரூ.25,000 ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது சுமார் 8 முதல் 10 மடங்கு வரை உயர்வு என்று கூறலாம். இந்த உயர்வு ஏற்கனவே சிரமங்களை சந்தித்து வரும் லாரி தொழிலை இன்னும் மோசமாக்கியுள்ளது.

டீசல் விலை தொடர்ந்து உயர்வு, டோல் கட்டணங்கள், வாகன பராமரிப்பு செலவுகள், லோடு கிடைப்பது குறைவு போன்ற பிரச்சினைகளுக்கு நடுவே இந்த புதிய கட்டண உயர்வு பெரும் சுமையாக அமைந்துவிட்டது. தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. நவம்பர் இறுதியிலிருந்தே இதை எதிர்த்து கோரிக்கைகள் வைத்தனர். உயர்த்தப்பட்ட கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும், பழைய கட்டணத்தையே தொடர வேண்டும் என்று வலியுறுத்தினர். 

இதையும் படிங்க: நைஜீரியா: சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரி..!! 30 பேர் பரிதாப பலி..!!

கனரக வாகனங்களுக்கு தகுதிச் சான்றிதழ் புதுப்பிக்கும் கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூரில் மத்திய, மாநில அரசை கண்டித்து 10,000க்கும் மேற்பட்ட லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ரேஷன் கடைகளுக்கு அரிசி ஏற்றி செல்லும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. 

இதையும் படிங்க: காக்கிநாடா: யூ-டர்ன் போட்டபோது நேர்ந்த விபரீதம்..!! பற்றி எரிந்த லாரிகள்..!! ஓட்டுநர் பலி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share