×
 

அணுஅணுவாக சித்திரவதை.. மனைவியை கொடூரமாக தாக்கிய காவலர்! தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை..!

மதுரையில் நீண்ட நாட்களாக மனைவிக்கு வரதட்சணை கொடுமை அளித்து வந்த காவலர் பூபாலனை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

பல ஆண்டுகாலமாக நிகழ்ந்து வந்த வரதட்சணை கொடுமைகள் குறைந்து விட்டதாக சொல்லப்பட்டாலும், படித்தவர்கள் கூட சில நேரங்களில் வரதட்சணை கேட்டு தனது மனைவியை கொடுமைப்படுத்தும் சம்பவங்களும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் மதுரையில் காவலராக பணிபுரிந்து வருபவர் தனது மனைவிக்கு நீண்ட நாட்களாக வரதட்சணை கொடுமை கொடுத்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் பூபாலன். இவருக்கு தங்க பிரியா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். தங்க பிரியா தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். 

இந்த நிலையில் தனது மனைவி தங்க பிரியாவுக்கு காவலர் பூபாலன் நீண்ட நாட்களாக வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளதாக தெரிகிறது. இதனால் அடிக்கடி கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடும் நிகழ்ந்து வந்துள்ளது. இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த பூபாலன் தனது மனைவியை கொடூரமான முறையில் தாக்கி சித்தரவதை செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் பலத்த காயமடைந்த தங்க பிரியா மதுரை அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்த சம்பவம் தொடர்பாக தங்க பிரியாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவலர் பூபாலன், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் பூபாலனின் தந்தை செந்தில்குமரன், அவரது மனைவி விஜயா, மகள் அனிதா ஆகிய நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காவல் ஆய்வாளர் மற்றும் அவரது தந்தையை பிடிக்க 3 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தனது மனைவியை தாக்கியது தொடர்பாக தன் தங்கையிடம் பூபாலன் பேசிய ஆடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனது மனைவியை அடித்து கையே வலித்து விட்டதாகவும் அவர் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இதையும் படிங்க: காதல் மனைவிக்கு டார்ச்சர்... பிரபல யூடியூபர் மீது வரதட்சணை கொடுமை வழக்கு!!

இதையும் படிங்க: ரவுடியை துடிக்கத் துடித்துக் கொன்ற கும்பல்..! 4 பேரை பிடித்து போலீஸ் தொடர் விசாரணை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share