"அடக்குமுறை"..! மார்க்கண்டேயனை வழக்கறிஞர் கூட சந்திக்க அனுமதி மறுப்பு.. கீதாஜீவன் கண்டனம்.!
திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் மார்க்கண்டேயன் கைது சம்பவத்தை கண்டித்து உள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், முதல்வர் குறித்து விமர்சித்து பேசியதாகக் கூறி கைது செய்யப்பட்டிருந்தார். அந்த நிலையில், கடந்த சனிக்கிழமை முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில், திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில், முதல்வர் விஜயை விமர்சித்து பேசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இன்று அதிகாலை, விளாத்திகுளத்தில் உள்ள மார்க்கண்டேயனின் வீட்டின் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர், அவரது வீட்டுக்குச் சென்ற போலீசார், கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இந்த நிலையில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை ஆளும் தவெக அரசின் அழுத்தம் காரணமாக காவல்துறை கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று முன்னாள் அமைச்சர் ஜீதா ஜீவன் தெரிவித்துள்ளார். மார்க்கண்டேயனை கைது செய்ய இவ்வளவு தீவிரம் காட்டிய அரசுக்கு ஶ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் அரசின் கண்களுக்கு தெரியவில்லையா அல்லது அவர் தவெக என்பதால் அவர் மீதுள்ள பாலியல் குற்றங்கள் மறைக்கப்பட்ட தூய சக்தி ஆகவே உள்ளாரா என்றும் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: கட்டை காலில் நின்னுட்டு என்ன பேச்சு... முதலமைச்சர் விஜயை வெளுத்து வாங்கிய கீதா ஜீவன்...!
மிசாவை எதிர்கொண்ட திமுக இந்த உருட்டல் மிரட்டலுக்கு அடி பணியாது எனவும் தெரிவித்தார். எதிர்க்கட்சியினரை குறிவைத்து பழிவாங்க இவ்வளவு தீவிரம் காட்டிய reels model அரசு கொஞ்சம் மக்கள் பாதுகாப்பிலும் காட்ட வேண்டும் எனவும் கூறினார். ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடுகளுக்கு பதிலாக அடக்குமுறை அரசியல் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். மார்க்கண்டேயனை அவரது உதவியாளர்கள் மற்றும் வழக்கறிஞர் கூட சந்திக்க முடியாத சூழலை ஏற்படுத்தி இருப்பதாக குற்றம்சாட்டி உள்ளார்.
இதையும் படிங்க: சட்டத்தின் ஆட்சியா.? சாத்தானின் ஆட்சியா.? மார்க்கண்டேயன் கைது சம்பவத்தை கண்டித்த ஸ்டாலின்..!!