×
 

அமெரிக்க மியாமியில் சரக்கு விமானம் விபத்து! சாலையில் பாய்ந்து தீப்பிடித்ததில் 5 பேர் பலி!

அமெரிக்காவின் மியாமியில் சரக்கு விமானம் ஓடுபாதையை விட்டு விலகி சாலையில் சென்ற வாகனங்கள் மீது மோதி தீப்பிடித்ததில் 5 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற மியாமி சர்வதேச விமான நிலையத்தில், தரையிறங்கிய அமேசான் நிறுவனத்தின் பிரைம் ஏர் போயிங் 767 சரக்கு விமானம் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையை விட்டு விலகி, விமான நிலைய எல்லைச் சுவரைத் தாண்டி அருகிலிருந்த சாலையில் சென்ற வாகனங்கள் மீது மோதி தீப்பிடித்து எரிந்த கோர விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

போர்ட்டோ ரிக்கோவின் சான் ஜுவான் நகரிலிருந்து மியாமிக்கு சரக்குகளை ஏற்றி வந்த '21 ஏர் ஃபைட் 7598' (Amazon Prime Air Boeing 767-300) சரக்கு விமானம், மியாமி சர்வதேச விமான நிலையத்தில் உள்ளூர் நேரப்படி நேற்று மதியம் தரையிறங்க முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக விமானம் ஓடுபாதையை விட்டு விலகி (Runway Overrun), அசுர வேகத்தில் முன்னேறி விமான நிலைய எல்லைக்கு வெளியே இருந்த பிரதான சாலையைக் கடந்து வாகனங்கள் மீது மோதியது.

அங்கு நிறுத்தப்பட்டிருந்த மற்றும் சாலையில் சென்றுகொண்டிருந்த கார்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் மீது விமானம் மோதி நசுக்கிய கையோடு, விமானத்தின் எரிபொருள் கசிவு ஏற்பட்டு அடுத்த சில விநாடிகளில் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. வானுயரத்திற்கு எழுந்த கரும்புகையும் பயங்கர தீப்பிழம்புகளும் அப்பகுதி முழுவதையும் சூழ்ந்தன. இக்கோர விபத்தில் வாகனங்களுக்குள் சிக்கியவர்கள் மற்றும் பாதசாரிகள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகிப் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்; அவர்களில் 3 பேரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: அமெரிக்க பாஸ்போர்ட் பெறும் குழந்தைகளுக்கு புதிய விதி.. இனி இது கட்டாயம் தேவையாம்..!!

விபத்து குறித்துத் தகவலறிந்து 60-க்கும் மேற்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பல மணி நேரம் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தன. விமானத்தின் விமானிகள் உள்ளிட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தைத் தொடர்ந்து, மியாமி சர்வதேச விமான நிலையத்தின் அனைத்து ஓடுபாதைகளும் தற்காலிகமாக மூடப்பட்டு விமானப் போக்குவரத்துகள் முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. விபத்து குறித்து அமெரிக்காவின் ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் (FAA) மற்றும் தேசியப் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) ஆகியவை உயர்மட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளன.

இதையும் படிங்க: மீண்டும் மத்திய கிழக்கைச் சூழ்ந்த போர் மேகம்... வானிலிருந்து பொழியும் குண்டு மழை... அமெரிக்கா - ஈரான் இடையே சரமாரி தாக்குதல்...!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share