×
 

உலகிலேயே மிகப்பெரிய எரிவாயு நிலையம் மீது ஈரான் தாக்குதல்... ஸ்டன் ஆன கத்தார்... ஷாக்கான உலக நாடுகள்...! 

கத்தாரில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய திரவ இயற்கை எரிவாயு ஏற்றுமதி ஆலை மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. 

சமீப நாட்களாக எண்ணெய் மற்றும் எரிவாயு உள்கட்டமைப்புகளை குறிவைத்து நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து, இந்தச் சம்பவங்கள் அப்பகுதியில் பதற்றம் மேலும் அதிகரிப்பதைக் குறிக்கின்றன.

வளைகுடா முழுவதும் எரிசக்தி வசதிகள் மீதான  தாக்குதல்கள் கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், கத்தாரில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய திரவ இயற்கை எரிவாயு ஏற்றுமதி ஆலை மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. 

ஈரானின் பிரம்மாண்டமான சவுத் பார்ஸ் எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை அடுத்து, இன்று காலை கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகள் கடுமையாக உயர்ந்தன. கத்தார், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பல எரிசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதன் தொடர்ச்சியாக, உலகளாவிய எரிவாயு விநியோகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கை உற்பத்தி செய்யக்கூடிய ராஸ் லஃபான் ஆலை மீது ஈரான் தொடர்ந்து 5 ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. அதில் 4 ஏவுகணைகளின் அடுத்தடுத்த தாக்குதல்கள் முறியடிக்கப்பட்ட நிலையில், 5வது ஏவுகணை ஆலை மீது பயங்கர தாக்குதலை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இன்று அதிகாலை ராஸ் லஃபான் மீது நடத்தப்பட்ட அடுத்தடுத்த தாக்குதல்களால் ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக கத்தாரின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தாக்குதல் நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே ஊழியர்களை வெளியேற்றியதால் உயிரிழப்பு தடுக்கப்பட்டதாக கத்தார் தெரிவித்துள்ளது.  

"இந்த தாக்குதல் ஒரு அபாயகரமான பதற்ற அதிகரிப்பாகவும், நாட்டின் இறையாண்மையின் அப்பட்டமான மீறலாகவும், அத்துடன் அதன் தேசியப் பாதுகாப்பு மற்றும் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கு நேரடி அச்சுறுத்தலாகவும் கத்தார் கருதுகிறது" என அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

ஈரான் மத்திய கிழக்கில் உள்ள பல்வேறு எரிவாயு நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. தனது கிழக்குப் பகுதியில் உள்ள எரிவாயு நிலையத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலை முறியடித்ததாகவும் சவூதி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மற்றொரு சம்பவத்தில், தெற்கு ரியாத்தில் உள்ள ஒரு சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகே பாலிஸ்டிக் ஏவுகணையின் ஏவுகணைகளின் சிதறல்கள் கண்டறியப்பட்ட சம்பவம் பதற்றத்தை அதிகரித்துள்ளது. 

ராஸ் லஃபான் தொழிற்பேட்டை 295 சதுர கிலோமீட்டர் 114 சதுர மைல்கள் பரப்பளவைக் கொண்டுள்ளது, இது நியூயார்க் நகரத்தின் அளவில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்காகும். திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) பதப்படுத்துதலுடன், எரிவாயுவை திரவமாக்கும் ஆலை, LNG சேமிப்பு, மற்றும் திரவச் சிதைவுப் பிரிப்பான்கள் போன்ற எரிவாயு தொடர்பான பிற வசதிகளும், ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையும் இங்கு அமைந்துள்ளன.

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share