×
 

போதை பொருள் விற்றால் குண்டர் சட்டம்! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எச்சரிக்கை!

‎போதை பொருட்கள் விற்பனை செய்யப்படும் நபர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப் பணிகள் மற்றும் மக்கள் குறைகளைத் தீர்ப்பது குறித்த ஆய்வுக் கூட்டம், செனாய் நகரில் உள்ள மண்டல அலுவலகத்தில் அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடிநீர், சுகாதாரம், காவல் மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.

ஆய்வுக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்த முக்கியத் தகவல்கள் போதைப் பொருட்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடுமையான குண்டர் சட்டம் பாயும் என அமைச்சர் எச்சரித்துள்ளார். 

பெண்கள் பாதுகாப்பாக நடமாடுவதை உறுதி செய்ய, டாஸ்மாக் மட்டுமின்றி சட்டவிரோதமாகப் பிளாக்கில் மது விற்கும் கடைகளும் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள் புகார் கொடுக்க வரும்போது, காவல் நிலைய கேமராக்கள் 24 மணி நேரமும் இயங்க வேண்டும். புகார் கொடுக்க வருபவர்களும் வீடியோ பதிவு செய்தால் அது இரு தரப்பினருக்கும் உதவியாக இருக்கும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வில்லிவாக்கம் தொகுதியில் புதிய மருத்துவக் கல்லூரி மற்றும் கலை அறிவியல் கல்லூரி திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இதையும் படிங்க: எங்களுக்கு விழுந்த வாக்குகளால்தான் நீங்கள் முதல்வர்! விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கடும் பதிலடி!

தொகுதியில் உள்ள 11 டாஸ்மாக் கடைகளில் ஏற்கனவே ஒன்று மூடப்பட்டுள்ளது; மற்ற கடைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மூடப்படும் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாற்று வேலை வழங்க ஏற்பாடு செய்யப்படும். மின் துண்டிப்பு செய்வதாக இருந்தால், முன்கூட்டியே மக்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என மின்சாரத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஊழல் செய்த அதிகாரிகள் அல்லது அமைச்சர்கள் மீது பழிவாங்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை; ஆனால் ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்வதே நோக்கம் என அமைச்சர் தெரிவித்தார். டெண்டர் பணிகளில் எந்தவித சிபாரிசும் செய்யக்கூடாது என அதிகாரிகளுக்குக் கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு ஒதுக்கும் ஒவ்வொரு ரூபாயும் 100 சதவீதம் மக்களுக்குச் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும்.

வெற்றி பெற்று நன்றி சொல்வதற்கு முன்பாகவே, மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கே தவெக அரசு முன்னுரிமை அளிக்கிறது என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது உரையில் உறுதிபடத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: திமுக ஒரு தீய சக்தி.. 76% மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சி! புள்ளிவிவரங்களுடன் விளாசிய முதல்வர் விஜய்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share