×
 

கொட்டமும், ஆணவமும் கூடி போச்சு... சுயமரியாதையை சீண்டிப் பார்த்தா அவ்ளோதான்... முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை..!!

மத்திய பாஜக அரசு தமிழர்களின் சுயமரியாதையை சீண்டிப் பார்ப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க. அரசின் இந்தித் திணிப்பு நீட்சியாக நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர் வைக்கப்பட்டு இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். இந்தித் திணிப்பு வெறியில் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது பா.ஜ.க. என்று குற்றம்சாட்டி உள்ளார். 'மொழி ஒன்று - வரிவடிவம் மூன்று' எனும் வகையில் இந்திப் பெயரையே தமிழ், ஆங்கிலத்திலும் எழுதி வைக்கும் இழிவான இந்தி திணிப்பு செயலில் மத்திய பா.ஜ.க. அரசு இறங்கியுள்ளதாக கூறினார்.

திருச்சி மண்டல இரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் 'கர்தவ்ய த்வார்' என எழுதி வைத்துள்ளனர் என்று குறிப்பிட்டு உள்ளார்.வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களில் ஏற்கெனவே 'பவிஷ்ய நிதி பவன்' என்ற பெயரைத் திணித்து விட்டனர் என்றும் குற்றவியல் சட்டங்களுக்கும் சமஸ்கிருதப் பெயரைத்தான் ஆங்கில வரிவடிவத்தில் எழுதுகின்றனர் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் பெயர் 'ஜல் சக்தி' ஆகிவிட்டது என்றும் மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டப் பெயர் மாற்றத்திலும் இதே வேலையைத்தான் காட்டினார்கள் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஊரான் வீட்டு நெய்யில SWEET செய்யாதீங்க… வெண்கல சிலை விஷயத்தை வெளுத்து வாங்கிய விஜய்..!!

கொட்டமும், ஆணவமும் கூடிக்கொண்டே போகிறது என்றும் தமிழர்களின் சுயமரியாதையைச் சீண்டிப் பார்க்கும் இவர்களுக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும் எனவும் கூறினார். தமிழ், ஆங்கிலப் பெயர்களிலும் இந்தியைத் திணிக்கும் முயற்சியைக் கைவிட்டு, உடனடியாக அங்கு சரியான தமிழ்ப் பெயர்கள் இடம்பெற வேண்டும் என்றும் இல்லையென்றால் தமிழர்களின் சூட்டை மத்திய பா.ஜ.க. அரசு உணர வேண்டி இருக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்து உள்ளார். 

இதையும் படிங்க: ஓம் சக்தி…பராசக்தி… திமுக ஒரு தீய சக்தி..!! தஞ்சையில் விஜய் அனல் தெறிக்கும் பேச்சு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share