×
 

அரபு நாடுகள் முன்னிலையில் மோடி விடுத்த அதிரடி முழக்கம்!! பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியா எடுத்த பிக் மூவ்!

இந்தியா சுதந்திரம் அடைந்த முதலே பாலஸ்தீனம் தனி நாடாக உருவாக வேண்டும் என ஆதரவு தெரிவித்து வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இந்தியா-அரபு நாடுகள் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நடந்தது. இதில் 19 அரபு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கலந்து கொண்டனர். பாலஸ்தீன வெளியுறவுத்துறை அமைச்சர் வார்சென் அகபெகியன் ஷாஹின் உட்பட பல முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். இது இரண்டாவது இந்தியா-அரபு வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு ஆகும்.

கூட்டத்தில் இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரம் முக்கியமாக விவாதிக்கப்பட்டது. பிரதமர் மோடி இந்தியாவின் நிலைபாட்டை தெளிவாக முன்வைத்தார். “பாலஸ்தீனம் இறையாண்மை கொண்ட, சுதந்திரமான தனி நாடாக அமைய வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது” என்று கூறினார். 

காசாவில் நிலவும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர எடுக்கப்படும் அமைதி முயற்சிகளை இந்தியா வரவேற்கிறது. அங்கு மனிதாபிமான உதவிகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: அமெரிக்காவையே தட்டித் தூக்கிய இந்தியா! பொருளாதார பலத்தில் அசூர வேகம்! எலான்மஸ்க் சொன்ன உண்மை!

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் இணைந்து வாழ்வதே நிரந்தரத் தீர்வு என்று மோடி தெரிவித்தார். 

அரபு நாடுகளை இந்தியாவின் விரிவுபடுத்தப்பட்ட அண்டை நாடுகளாக பார்க்கிறேன் என்றும், நாகரிக பிணைப்புகள் மற்றும் கலாச்சார உறவுகளின் அடிப்படையில் நட்பு வலுவாக உள்ளது என்றும் கூறினார். எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கூட்டத்திற்கு பிறகு டெல்லி அறிக்கை (Delhi Declaration) வெளியிடப்பட்டது. அதில் 1967-ஆம் ஆண்டு எல்லைகளின் அடிப்படையில், கிழக்கு ஜெருசலேமை தலைநகராகக் கொண்ட சுதந்திர பாலஸ்தீன நாடு அமைய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. 

எரிசக்தி, தொழில்நுட்பம், வர்த்தகம், முதலீடு, சுகாதாரம் ஆகிய துறைகளில் இந்தியா-அரபு நாடுகள் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு பிரதமர் மோடி தொலைநோக்கு பார்வையை முன்வைத்தார்.

பாலஸ்தீன அகதிகளுக்கான ஐநா முகமைக்கு இந்தியா இதுவரை 170 மில்லியன் டாலர் நிதி மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளதை சுட்டிக்காட்டியது. காசாவில் புனரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள சண்டை நிறுத்தம் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இந்தியா சுதந்திரம் அடைந்த முதல் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. இஸ்ரேலுடன் நெருக்கமான உறவு இருந்தாலும், இரு நாட்டு தீர்வு (two-state solution) என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை. இது உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த கூட்டம் இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் நீண்டகால கொள்கையை மீண்டும் உறுதிப்படுத்திய முக்கிய நிகழ்வாக அமைந்தது. 

இதையும் படிங்க: காங்கிரஸுக்கு புது சிக்கல்! செல்வப்பெருந்தை பேச்சை டேப் செய்யும் மர்மநபர்கள்! அதிர்ச்சியில் தொண்டர்கள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share