×
 

" இந்தியாவில் முதன்முறை"..! மைக்ரோபிளாஸ்டிக்-க்கு செக்... மதர் டெய்ரி புதிய முயற்சி..!!

இந்தியாவில் முதன்முறையாக மட்கும் பால் பாக்கெட்டுகள் அறிமுகமாகின்றன.

இந்தியாவில் தினசரி பால் நுகர்வு மிக அதிகம். கோடிக்கணக்கான குடும்பங்கள் ஒவ்வொரு நாளும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் வரும் பாலை வாங்கி பயன்படுத்துகின்றன. இந்தப் பாக்கெட்டுகள் சுற்றுச்சூழலுக்கு பெரும் சுமையாக மாறியுள்ள நிலையில், மத்திய அரசின் National Dairy Development Board முழு உரிமையிலான மதர் டெய்ரி நிறுவனம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க புதுமையை அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவின் முதல் இயற்கையாக மண்ணில் மக்கும் பால் பாக்கெட்டை உருவாக்கியுள்ளது மதர் டெய்ரி. கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலான தீவிர ஆராய்ச்சிக்குப் பிறகு தயாரிக்கப்பட்ட இந்த புதிய பாக்கெட், உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5, 2026 அன்று டெல்லி-என்.சி.ஆர் பகுதியில் பசு பால் வகைக்கு முதலில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

புதிய பாக்கெட்டின் சிறப்பம்சங்கள் என்ன என்று பார்த்தால், பாரம்பரிய Low-Density Polyethylene பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் சுற்றுச்சூழலில் நூற்றாண்டுகளுக்கும் மேலாக நீடித்து, மைக்ரோபிளாஸ்டிக் மற்றும் நச்சுப் பொருட்களை விட்டுச் செல்கின்றன. ஆனால் மதர் டெய்ரியின் புதிய பாக்கெட், மண்ணில் போடப்பட்டால் சில ஆண்டுகளுக்குள் உயிர் கிடைக்கும் வகையிலான மெழுகு போன்ற பொருளாக மாறி, மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளால் இயற்கையான கூறுகளாக மக்கிப் போகும். இதனால் மைக்ரோபிளாஸ்டிக் அல்லது எந்த நச்சுப் பொருளும் எஞ்சாது.

இதையும் படிங்க: புதுச்சேரி பெண்களுக்கு ஜாக்பாட்! குடும்பத் தலைவிகள் உதவித்தொகை ரூ.2500 ஆக உயர்வு! 

இந்த பாக்கெட் சேமிப்பு, போக்குவரத்து மற்றும் பயன்பாட்டில் பாரம்பரிய பாக்கெட்டைப் போலவே செயல்படும். மேலும் இது மறுசுழற்சிக்கு உகந்ததாகவும் இருக்கும். ஆனால் மறுசுழற்சி அமைப்பில் இருந்து தப்பும் “fugitive plastic” எனப்படும் குப்பைகளுக்கு இது தீர்வாக அமையும். பால் சுவை, தரம், அடுக்கு வாழ்நாள் ஆகியவை மாறாது. விலையும் உயராது என்று நிறுவனம் உறுதியளித்துள்ளது. 

இதையும் படிங்க: மகளிர் உரிமைத் தொகையில் 80 லட்சம் பேர் நீக்கம்..? எது உண்மை..! தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share