விடிந்ததும் வரலாற்று சாதனை... பூமியைத் தொட்டது ஓரியன்... ஆர்டெமிஸ் 2 குழுவினர் பத்திரமாக மீட்பு...!
நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் நாசாவின் பணிக்கான ஆய்வுகளை முடித்துக் கொண்டு பூமிக்கு நான்கு விண்வெளி வீரர்கள் திரும்பினர்.
நிலவை ஆய்வு செய்த பின் பூமிக்கு வெற்றிகரமாக திரும்பி இருக்கிறது நாசாவுடைய ஓரியன் விண்கலம். 54 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவை ஆய்வு செய்து பூமிக்கு விண்வழி வீரர்கள் திரும்பி இருக்கக்கூடிய இந்த நிகழ்வு என்பது இன்று காலை நடைபெற்றிருக்கிறது. நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் நாசாவுடைய பணிக்கான ஆய்வுகளை முடித்துக்கொண்டு பூமிக்கு திரும்பிய நான்கு விண்வெளி வீரர்களும் பத்திரமாக மீட்கப்பட்டிருக்கிறார்கள்.
ஆர்டெமிஸ் 2 பத்து நாட்கள் நிலவுக்கு அருகில் சென்று ஆய்வு செய்துவிட்டு நான்கு விண்வெளி வீரர்களும் பூமிக்கு பத்திரமாக திரும்பி இருக்கிறார்கள். இந்திய நேரப்படி காலை ஐந்து மணி 37 நிமிடங்களுக்கு பசிபிக் பெருங்கடலில் சாண்டியாகோ கடற்கரை பகுதியில் இறங்கிய ஓரியன் விண்கலத்தில் இருக்கக்கூடிய அந்த நான்கு விண்மணி வீரர்களை பத்திரமாக மீட்டிருக்கிறார்கள்.
இந்த நாசாவினுடைய ஓரியன் விண்கலத்தை பொறுத்தவரைக்கும் நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அழைத்துச் செல்ல வடிமைக்கப்பட்ட அதி நவீன விண்கலமாக பார்க்கப்படுகிறது. ஆர்டெமிஸ் திட்டத்தின் கீழ் நிலவை சுற்றி வரவும் விண்வெளி வீரர்களை பாதுகாப்பாக பூமிக்கு திரும்ப கொண்டு வரவும் இதை பயன்படுத்தப்படுவதாக சொல்லப்பட்டிருக்கிறது. இது நிலவினுடைய ஈர்ப்பு விசையை பயன்படுத்தி பயணிக்கும் திறனுடையதாக நாசாவினுடைய ஓரியன் கிராப்ட் என்கின்ற விண்கலமானது இருந்திருக்கிறது.
இதையும் படிங்க: 50 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சாதனை... மனிதர்களை நிலவுக்கு அனுப்பியது நாசா... விண்ணில் பாய்ந்தது ஓரியன் விண்கலம்...!
இந்த திட்டத்தினுடைய நோக்கத்தை பொறுத்தவரைக்கும் ஆர்டெமிஸ் 2 ஆர் டைம்ஸ் 2 மூலம் நிலவுக்கு மனிதர்களை ஏற்றி சென்று நடைபெற்றிருக்கிறது. லாக்கிக் மார்டின் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட நாசாவால் இயக்கப்படுகின்ற அந்த ஒரு விண்கலமாகவும் இருக்கிறது. விண்ணத்தை பொறுத்த வரைக்கும் நான்கு விண்வெளி விலைகளை பயணம் செய்யலாம். நீண்ட விண்வளி பயணத்திற்கு ஏற்றது.
இதனுடைய பாதுகாப்பை பொறுத்தவரைக்கும் 5000 டிகிரிஃபரன்ஹீட் சுமார் 271 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தாங்கும் வெப்பகவசமாக பயன்படுத்த கூட கூடிய அளவிற்கு இதனுடைய பாதுகாப்பாக இருக்கிறது. அவசர கால வெளியேற்றம் அமைப்பு இருக்கிறது. மின்சாரத்தை பொறுத்தவரைக்கும் ஐரோப்பிய விண்வெளி முகமையின் இஎஸ்ஏ சேவை தொகுதியால் யூரோப்பியன் சர்வீஸ் மாடல் மின்சாரம் இதற்கு பயன்படுத்தப்படுவதாக சொல்லப்பட்டிருக்கிறது.
மனிதர்கள் இதுவரை பயணித்திராத தொலைவை எட்டிய ஆர்டெமிஸ்-2 குழுவினர் தங்களது 10 நாள் நிலவுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு பூமிக்குப் பாதுகாப்பாகத் திரும்பியுள்ளனர்.
இதையும் படிங்க: நிலவில் நிரந்தரமான ஆராய்ச்சி மையம்!! 2030தான் டார்கெட்!! சொல்லி அடிக்கும் நாசா!!