×
 

ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

ஈரான் மீது தாக்குதல் நடத்தி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தான் போரை தொடங்கியதாக அமெரிக்க செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் குற்றம்சாட்டி உள்ளார்.

அமெரிக்கா-ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தைகள் மத்திய கிழக்கு மற்றும் உலக அரசியலில் மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாகும். இந்த பேச்சுவார்த்தைகள் ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தை கட்டுப்படுத்துவதையும், பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பை உறுதி செய்வதையும், பொருளாதார தடைகளை நீக்குவதையும் நோக்கமாகக் கொண்டவை. இஸ்ரேல்-அமெரிக்க உறவைப் பொறுத்தவரை, ஈரானின் அணு ஆயுதத் திட்டம் இஸ்ரேலுக்கு ஒரு முக்கிய அச்சுறுத்தலாகக் கருதப்படுவதால், இந்த பேச்சுவார்த்தைகள் அவர்களின் உறவில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 

இஸ்ரேல் ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தை தனது இருப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதுகிறது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானின் அணு வசதிகளை முற்றிலும் அழிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தற்போது, இஸ்ரேல் - ஈரான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், ஈரானின் முன்னாள் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளரும், உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனியின் முக்கிய ஆலோசகருமான அலி ஷம்கானியை இஸ்ரேல் கொன்றது. ஜூன் 13 ஆம் தேதி இஸ்ரேலின் "Operation Rising Lion" என்ற தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார். ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தை முடக்குவதற்கும், முக்கிய இராணுவ மற்றும் அரசியல் தலைவர்களை நீக்குவதற்கும் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறியது.

இதையும் படிங்க: ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

2023-இல் சவுதி அரேபியாவுடனான இராஜதந்திர உறவை மீட்டமைக்கும் பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்கு வகித்த அலி ஷம்கானி 2025-இல் அமெரிக்காவுடனான அணு பேச்சுவார்த்தைகளை மேற்பார்வையிட்டார். இந்த நிலையில் அவர் கொல்லப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஈரானை தாக்குவதன் மூலம் நெதன்யாகு தான் இந்தப் போரைத் தொடங்கினார் என்று அமெரிக்க செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் குற்றம்சாட்டி உள்ளார்.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தைகளை நாசமாக்குவதற்காக ஈரானின் மூத்த அணுசக்தி பேச்சுவார்த்தையாளர் அலி ஷம்கானியை அவர் வேண்டுமென்றே படுகொலை செய்தார் என்றும் நெதன்யாகு நடத்தும் மற்றொரு சட்டவிரோதப் போரில் ராணுவ ரீதியாகவோ அல்லது நிதி ரீதியாகவோ அமெரிக்கா உதவக்கூடாது என்று வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share