×
 

பாகிஸ்தானுக்கு அடுத்த பெரும் தலை வலி.. தீவிரமடையும் பலுசிஸ்தான் தனி நாடு கோரிக்கை.!!

பாகிஸ்தானிலிருந்து பலுசிஸ்தான் பிரிந்து புதிய நாடாக உருவாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானிலிருந்து பலுசிஸ்தான் பிரிந்து புதிய நாடாக உருவாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்​தானின் மிகப்​பெரிய மாகாணம்​ பலுசிஸ்​தான். ஆனால், பாகிஸ்​தான் அரசு தங்​களை புறக்​கணிப்​ப​தாக​க் கூறி பலூச் பகு​தியை தனி நாடாக அறிவிக்க வலியுறுத்தி அங்​குள்ள பலூச் விடு​தலைப் படை​ நீண்ட காலமாகப் போராட்​டம் நடத்தி வரு​கிறது. தற்போது 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை இந்​தியா தொடங்கிய பிறகு, பலூச் மக்​களும் தங்​கள் பங்​குக்கு பாகிஸ்​தானுக்கு எதி​ராக தாக்​குதலை நடத்தி வரு​கின்​றனர். 12 பாகிஸ்​தான் ராணுவ வீரர்கள் சென்ற வாக​னத்தை வெடி வைத்து தகர்த்​தனர். பலூச் மாகாணத்தின் தலைநகர் குவெட்​டாவை கைப்​பற்றி விட்​ட​தாக​வும் பலூச் விடு​தலைப் படை அறிவித்தது.



பலூச் பகுதியைச் சேர்ந்த பிரபல எழுத்​தாளர் மிர் யார் பலூச் இதுபற்றி கூறுகையில், "பாகிஸ்​தானில் இருந்து பலுசிஸ்​தான் தனி நாடாகி விட்​டது. இதற்​கான அறி​விப்பு விரை​வில் வரும். புதிய அரசிடம் நிர்​வாகம் ஒப்​படைக்​கப்​படும். இந்திய தலைநகர் டெல்​லி​யில் பலுசிஸ்​தான் தூதரகத்தை தொடங்க அனு​ம​திக்க வேண்​டும். பலுசிஸ்​தானுக்கு அமைதி படையை ஐ. நா. அனுப்ப வேண்​டும். தனி நாடாக பலுசிஸ்​தானை அங்​கீகரிக்க வேண்​டும்’’ என்று வெளிப்படையாகவே அறிவித்துள்ளார்.



பாகிஸ்​தான் மக்​கள் தொகை​யில் 6 சதவீதம் மக்​கள் பலூச் பகு​தி​யில் உள்​ளனர். ஆனால், நிலப்​பரப்பு மட்​டும் 45 சதவீதம். மிகப்​பெரிய மாகாணமான பலூச்சில் தனிமங்​கள் கொட்​டிக் கிடக்​கின்றன. இந்​துக்​களுக்கு பலுசிஸ்​தானுக்​கும் உள்ள தொடர்பை இங்​குள்ள ஹிங்​குலாஜ் அம்​மன் கோயில்​தான் உறுதி செய்​கிறது. ஹிங்​குலி என்​ப​தற்கு சிந்தி மொழி​யில் முன் நெற்றி பொட்டு அல்​லது குங்​குமம் என்று அர்த்​தம். இந்தக் கோயிலுக்கு இந்​துக்​கள் ஆண்​டு​தோறும் புனித யாத்​திரை​ மேற்​கொள்​கின்​றனர்.

இதையும் படிங்க: எல்லையில் இரவில் சண்டை நிறுத்தம்.. இயல்புக்கு திரும்பும் எல்லையோர மாநிலங்கள்..மக்கள் நிம்மதி பெருமூச்சு!



பாகிஸ்​தான் அரசின் புறக்​கணிப்​பு, சீனா​வின் தலையீடு, சீனக் கட்டுமானங்கள் போன்​றவற்​றால் விரக்​தி​யில் உள்ள பலுசிஸ்​தான் மக்​கள், தங்​களை தனி நாடாக அறிவிக்க கோரி போ​ராடி வரு​கின்​றனர். 1971இல் பாகிஸ்தானிலிருந்து வங்கதேசத்தை இந்​தியா உருவாக்கியது போல பலூச் தனி நாடாக இந்தியாவின் உதவியையும் பலூச் மக்கள் எதிர்பார்க்கின்றனர். பலூச் மக்களின் கனவு நனவாகுமா? காலத்தின் கையில் விடை உள்ளது.

இதையும் படிங்க: அடங்காத பாகிஸ்தானால் பதற்றம்.. இந்திய எல்லை மாநிலங்களில் மீண்டும் பிளாக் அவுட்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share