திருச்சியில் நாதக மாபெரும் மாநாடு..! 234 தொகுதி வேட்பாளர்களை மேடையேற்றும் சீமான்..! நேரில் ஆய்வு..!
திருச்சியில் நடைபெறும் நாம் தமிழர் கட்சி மாநாட்டு பணிகளை சீமான் நேரில் ஆய்வு செய்தார்.
வரும் 21ஆம் தேதி திருச்சியில் நாம் தமிழர் கட்சி நடத்தவிருக்கும் மாநாடு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநாடு "மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு" என்ற பெயரில் நடைபெறுகிறது. இது அடிப்படை மாற்றம், அமைப்பு ரீதியான மாற்றம், அரசியல் மாற்றம் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட எளிய மக்களின் புரட்சிகரமான திரட்டலாக விவரிக்கப்படுகிறது. மாற்றம் என்பது வெறும் சொல்லாக இல்லாமல், உண்மையான செயலாக மாற வேண்டும் என்பதை இந்த மாநாடு வலியுறுத்துகிறது.
திருச்சி மாவட்டத்தில் ஆலம்பட்டிபுதூர் பகுதியில் மாநாடு நடைபெற உள்ளது. திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த திடல் சுமார் 55 ஏக்கர் பரப்பளவில் விரிவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டு இலட்சம் இருக்கைகள் வரை தயாரிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநாடு சனிக்கிழமை நடைபெறுவதால், பலரும் குடும்பத்துடன், நண்பர்களுடன் திரள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த மாநாட்டின் மிக முக்கிய அம்சம், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் 234 தொகுதி வேட்பாளர்களை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்த உள்ளதுதான்.
தமிழகம் முழுவதும் தனித்துப் போட்டியிடும் முடிவுடன், அனைத்து தொகுதிகளுக்குமான வேட்பாளர்கள் இங்கே மேடையில் அறிவிக்கப்பட உள்ளனர். இது தமிழக அரசியலில் புதிய வரலாற்றை எழுதும் திருப்புமுனையாக இருக்கும் என்று கட்சியினர் நம்புகின்றனர். ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. பூமிபூஜை, கால்கோள் நிகழ்வுகள் ஏற்கெனவே நடந்து முடிந்துள்ளன. கட்சியின் மாநில அளவிலான நிர்வாகிகள், மாவட்டப் பொறுப்பாளர்கள், பாசறை உறுப்பினர்கள் அனைவரும் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். சீமானின் தாயார் அன்னம்மாள் கூட தனது சொந்த ஊரான சிவகங்கை அரணையூரில் வீடு வீடாகச் சென்று வெற்றிலை பாக்கு வைத்து மக்களை அழைத்துள்ளார்
இதையும் படிங்க: மனசாட்சி இல்லையா? இலங்கை முகாமில் தவிக்கும் மீனவர்கள்... மீட்டு வர சீமான் வலியுறுத்தல்...!
இந்த நிலையில், வரும் 21ஆம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள நாம் தமிழர் கட்சியின் மாநாட்டிற்கான பணிகளை சீமான் நேரில் சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, நீரற்ற நிலமாக பூமி மாறிவிட்டது என வேதனை தெரிவித்தார். மரம் என்பது வெறும் மரம் அல்ல அதுதான் நமது உயிர் எனவும் தெரிவித்தார். மரம் எவ்வளவு முக்கியம் என்பதை சொல்லிக் கொடுக்க வேண்டியது கட்டாயம் என்றும் சீமான் தெரிவித்துள்ளார். பீகாரில் தாய்ப்பாலில் யுரேனியம் கலந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: “குடும்பத்தோட வந்துடுங்க தாயி..” - ஒற்றை ஆளாக மகனின் மாநாடு வேலையை இழுத்து போட்டு செய்யும் சீமான் தாய்... வீடு வீடாக அழைப்பு..!