×
 

மத்திய கிழக்கில் போர் பதற்றம்!! 9,000 பேர் நாடு திரும்பியாச்சு!! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டதிலிருந்து 9,000க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்காவிற்கு பாதுகாப்பாகத் திரும்பியுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

வாஷிங்டன்: ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து, 9,000க்கும் மேற்பட்ட அமெரிக்க குடிமக்கள் மத்திய கிழக்கிலிருந்து பாதுகாப்பாக அமெரிக்காவுக்கு திரும்பியுள்ளனர் என அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தப் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்கர்களை விரைவாக மீட்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை இஸ்ரேல் மீதும், அமெரிக்க ராணுவ தளங்கள் உள்ள வளைகுடா நாடுகள் மீதும் நடத்தி வருகிறது. இதனால் நேரடி போர் சூழல் உருவாகியுள்ளது. 

வான்வெளி மூடல், விமான நிலையங்கள் சேதம் ஆகியவற்றால் பயணங்கள் முடங்கிய நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறை 14 நாடுகளில் உள்ள அமெரிக்கர்களை உடனடியாக வெளியேறுமாறு எச்சரித்துள்ளது.

இதையும் படிங்க: இத்தனைக்கும் ஒபாமாதான் காரணம்! நான் மட்டும் இல்லைனா? 3 வருஷத்துக்கு முன்னாடியே போர் ஆரம்பிச்சிருக்கும்! ட்ரம்ப் காட்டம்!!

இந்நிலையில், அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதள பதிவில் கூறியதாவது: “ஈரான் மீதான தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து 9,000க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் பாதுகாப்பாக வீடு திரும்பியுள்ளனர்.

மத்திய கிழக்கில் இருக்கும் அமெரிக்க குடிமகனாக நீங்கள் வீடு திரும்ப விரும்பினால், வெளியுறவுத் துறை இணையதளத்தில் பதிவு செய்யுங்கள். உங்கள் இருப்பிடத்தை அடையாளம் கண்டு, பயண ஏற்பாடுகளை செய்வோம். இலவச விமானங்கள், வாடகை விமானங்கள், வணிக விமான முன்பதிவுகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்து வருகிறோம். 24 மணி நேரமும் +1-202-501-4444 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.”

வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோவும் இதே தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். தற்போது சுமார் 1,500 அமெரிக்கர்கள் உதவி கோரியுள்ளனர். ராணுவ விமானங்கள், சார்ட்டர் விமானங்கள் மூலம் மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. இருப்பினும், வான்வெளி மூடல் காரணமாக சிலர் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அமெரிக்கா ஏற்கனவே பலரை தனியார் விமானங்கள் மூலம் மீட்டுள்ளது.

இந்தப் போர் மேலும் விரிவடைந்தால், எண்ணெய் விலை உயர்வு, உலக பொருளாதாரம் பாதிப்பு போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது. அமெரிக்கா தனது குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக பதிவு செய்து உதவி பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஈரானுக்கு மிசைல் கொடுத்தது யாரு? எங்களுக்கு தெரியாதே? நழுவ பார்க்கும் சீனா?!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share