×
 

ஆப்கானிஸ்தானை கதறவிட்ட பாகிஸ்தான் ... 274 தலிபான்கள் காலி... 22 ராணுவ முகாம்கள் அழிப்பு....!

ஆப்கானிஸ்தானுடனான சண்டையில் 274 தலிபான்களைக் கொன்றதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானுடனான அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. பாதுகாப்பு அமைச்சரின் வெளிப்படையான போர் அறிவிப்பைத் தொடர்ந்து, பாகிஸ்தான் இராணுவம் தனது தாக்குதல்களைத் தொடர சபதம் செய்துள்ளது.

ஆப்கானிஸ்தானுடனான சண்டையில் 274 தலிபான்களைக் கொன்றதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. தனது வீரர்கள் 12 பேர் கொல்லப்பட்டதையும், 27 பேர் காயமடைந்ததையும் பாகிஸ்தான் ஒப்புக் கொண்டுள்ளது.

வியாழக்கிழமை இரவு முதல் எல்லையில் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது. பாகிஸ்தானுக்குள் ஆப்கானிஸ்தான் ட்ரோன் தாக்குதல்களையும் நடத்தியுள்ளது.

இதையும் படிங்க: வெடித்தது போர் !! மாறி மாறி தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான்..!! நிலவும் பதற்றம்..!!

இதைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை, பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் அகமது ஷெரீப் சவுத்ரி, ஆப்கானிஸ்தான் மீது கடுமையான நிலைப்பாட்டை கடைப்பிடிப்பதாக உறுதியளித்தார், மேலும் இந்தியா கிளர்ச்சியாளர் குழுக்களுக்கு உதவுவதாக மீண்டும் குற்றம் சாட்டினார்.

பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் சவுத்ரி கூறுகையில், "காந்தஹார், காபூல் மற்றும் பாக்டியா உட்பட 22 இடங்களில் மோதல்கள் நடந்துள்ளன. பாகிஸ்தான் ராணுவம் உஷார் நிலையில் உள்ளது, மேலும் எந்தவொரு தாக்குதலுக்கும் கடுமையாக பதிலடி கொடுக்கும். ஆப்கானிஸ்தான் மண்ணிலிருந்து வரும் எந்தவொரு தாக்குதலுக்கும் ஆப்கானிஸ்தான் தாலிபான் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம். பாகிஸ்தானில் தாக்குதல் நடந்தால், நாங்கள் ஆப்கானிஸ்தான் தாலிபான்களைத் தாக்குவோம். காபூல் அல்லது இஸ்லாமாபாத்தில் இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டியிருக்கும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ரவி நீரை நிறுத்தப்போகும் இந்தியா..!! தண்ணீரின்றி தவிக்கும் பாகிஸ்தான்..!! ஆட்டம் ஆரம்பம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share