×
 

வெடித்துச் சிதறிய ஏசி.. பாகிஸ்தான் அரசு மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து... 15 பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி பலி...!!

இன்று காலை மருத்துவமனையின் குழந்தைகள் காப்பகத்தினுள் ஏர் கண்டிஷனர் கம்ப்ரசர் வெடித்ததைத் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இயங்கி வரும் அரசுக்கு சொந்தமான பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கழக (PIMS) மருத்துவமனையில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவின் மூன்றாவது தளத்தில் உள்ள குழந்தைகள் பராமரிப்புப் பகுதியில் இந்த விபத்து நேரிட்டது. இதில் அங்கு சிகிச்சையில் இருந்த 15 புதிதாக பிறந்த குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

அங்குள்ள குழந்தைகள் காப்பகத்தில் 16 பச்சிளங்குழந்தைகள் வைக்கப்பட்டிருந்தனர். அங்குள்ள செய்தி நிறுவனங்கள், பச்சிளம் குழந்தை ஒன்றில் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளன. 

இன்று காலை 6:45 மணிக்கு மருத்துவமனையின் குழந்தைகள் காப்பகத்தில் ஏர் கண்டிஷனர் கம்ப்ரசர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மருத்துவமனையின் மூன்றாவது தளத்தில் உள்ள பச்சிளம் குழந்தைகள் பிரிவில் தீ மளமளவென பரவியுள்ளது. அந்த சமயத்தில் அந்தப் பிரிவில் மொத்தம் 16 புதிதாகப் பிறந்த குழந்தைகள் சிகிச்சையில் இருந்தன. அங்கு பரவிய அடர்ந்த புகையினாலும், தீயின் பிடியினாலும் ஒரே ஒரு குழந்தை மட்டுமே உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், மற்ற 14 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே கருகி உயிரிழந்தன.

இதையும் படிங்க: பயங்கரவாதிகளுக்கு ரூ.25 கோடி? முகாம்களை புனரமைக்க ரூ.11 கோடி! மீண்டும் அடங்காத பாக்.,!

தீ விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக் குழுவினர், மருத்துவமனை கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் உள்ள ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து உள்ளே நுழைந்தனர்.

தீவிரப் போராட்டத்திற்குப் பிறகு தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுத் தணிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

உயிரிழந்த குழந்தைகளின் உடல்கள் அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், இந்தத் துயரச் சம்பவம் குறித்து "ஆழ்ந்த துக்கத்தையும் மனமார்ந்த வருத்தத்தையும்" வெளிப்படுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். "உடனடி விசாரணை நடத்துமாறு" அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியவர், "குழந்தைகளுடனான இத்தகைய நிலைமையைச் சரிசெய்ய முடியாது" என வருத்தம் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: இந்தியா முன்னேறுகிறது! பாக்., திணறுகிறது! அந்நாட்டு அமைச்சரே வெளியிட்ட அதிர்ச்சி எச்சரிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share