என்னை மீறி தொடுடா பாக்கலாம்.. ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கும் பாகிஸ்தான்.. இஸ்ரேலுக்கு எச்சரிக்கை..!
இஸ்ரலில் இருக்கக்கூடிய அமெரிக்க தூதரகத்தின் அருகே ஈரான் ஏவுகனை தாக்குதலை மேற்கொண்டிருக்கிறது.
ஈரான் இஸ்ரேல் போரால் இரு நாடுகளிலும் மொத்தமாக 248 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். எங்கள் மீது இஸ்ரேல் அணு ஆயுத அணு ஆயுத தாக்குதலை நடத்தினால் பாகிஸ்தானும் இஸ்ரேல் மீது குண்டு போடும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இஸ்ரேல் மீது பாகிஸ்தான் அணு ஆயுத தாக்குதல் நடத்தும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. ஈரான் அணு ஆயுத கிடங்குகளை, எண்ணெய் கிடங்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் நேற்று முன்தினம் ஒரே நேரத்தில் 2000க்கும் மேற்பட்ட ஏவுகளை தாக்குவோம் என பகிரங்கமாக ஒரு எச்சரிக்கையை ஈரான் விடுத்திருந்தது.
தற்போது அணுகுண்டு வீசுவோம் என்கின்ற ஒரு எச்சரிக்கையும் இஸ்ரேலுக்கு ஈரான் தெரிவித்திருக்கிறது. தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக இந்த ஒரு சூழல் இரு நாடுகளும் மாறி மாறி இரு நாட்டு தலைவர்களும் பரஸ்மரக்கமாக மாறி மாறி எச்சரிக்கை விடுத்து ஏவுகனை தாக்குதலை மேற்கொண்டிருக்கிறார்கள்.
இதையும் படிங்க: சீனாவுக்கு டார்க்கெட்! பாக்.உடன் உறவு கொண்டாடும் அமெரிக்கா.. வேடிக்கை பார்க்கும் இந்தியா..!
இஸ்ரலில் இருக்கக்கூடிய அமெரிக்க தூதரகத்தின் அருகே ஈரான் ஏவுகனை தாக்குதலை மேற்கொண்டிருக்கிறது. குறிப்பாக ரஷ்யா அதேபோல ஓமன் கத்தார் அமெரிக்கா உட்பட உலக நாடுகளுமே இந்த இரு நாட்டு போர்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என பலக்கட்ட பேச்சு வார்த்தையை மேற்கொண்டிருக்கிறது. இந்த நிலை தான் பாகிஸ்தானும் தற்பொழுதேன் போரில் ஈடுபடும் என ஈரான் தெரிவித்திருக்கிறது. தங்கள் மீது இஸ்ரேல் அணு ஆயுத தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தானும் இஸ்ரேல் மீது அணு குண்டு போடும் என்கிற எச்சரிக்கையை ஈரான் விடுத்திருக்கிறது.
இஸ்ரேலுக்கு எதிராக ஏமன் ஹவ்தி படைகள் மற்றும் லெபனான் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இஸ்ரேலுக்கு எதிராக மும்முனை தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானும் போரில் ஈடுபடவுள்ளதாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒரு பக்கம் ட்இஸ்ரேலில் இருக்கக்கூடிய அமெரிக்காவுடைய ராணுவ நிலைகள் அந்த இடங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் நிச்சயமாக அமெரிக்கா தகுந்த பதிலடி கொடுக்கும் என அமெரிக்க அதிபர் ஒருபுறம் எச்சரிக்கை கொடுத்திருக்கக்கூடிய சூழ்நிலையில், ஈரானும் தற்பொழுது பாகிஸ்தான் இஸ்ரேல் மீது அணு ஆயுதங்களை வீசும் அப்படிங்கிற ஒரு எச்சரிக்கையை இஸ்ரேலுக்கு விடுத்திருக்கிறது. தொடர்ச்சியாக இரு நாடுகளும் மாறி மாறிபரஸ்பரமாக குற்றச்சாட்டை முன்வைத்து இரு நாடுகளும் மாறி மாறி ஏவுகனை தாக்குதலில் மேற்கொண்டிருப்பது உயிரிழுப்புகளை மேலும் அதிகரிக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
இதையும் படிங்க: பாக். சொன்னதை விட அதிக இடங்களில் இந்தியா தாக்குதல்..! அதிர வைக்கும் பாகிஸ்தானின் ஆவணம்..!