×
 

போலி வீடியோ, பொய் பிரச்சாரம்.. சொந்த மக்களையே ஏமாற்றிய பாகிஸ்தான் ராணுவம்..!

போலி வீடியோக்கள் மற்றும் பொய் பிரசாரங்களை பரப்பி சொந்த மக்களையே ஏமாற்றியுள்ளது பாகிஸ்தான் ராணுவம்.

இந்தியாவுக்கு எதிரான போரில் கடுமையான பின்னடைவுகளை பாகிஸ்தான் சந்தித்தபோதிலும், அதை மக்களிடம் இருந்து மறைக்க போலியான எடிட் செய்யப்பட்ட வீடியோக்கள், பொய் பிரசாரங்களை பரப்பி மக்களை ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ராணுவ ஜெனரல், மக்கள் தொடர்பு துறை மூலம் பொய்யான தகவல்களை பரப்பி மக்களை ஏமாற்றியதை மத்திய அரசின் பிஐபி அமைப்பின் உண்மை கண்டறியும் பிரிவு கண்டுபிடித்துள்ளது. குறிப்பாக இந்தியாவின் விமானத் தளங்களை தகர்த்துவிட்டோம் என்று போலியான வீடியோக்களை பத்திரிகைகளுக்கும், சேனல்களுக்கும் பாகிஸ்தான் தரப்பில் அனுப்பி வைக்கப்பட்டது. இதை நம்பி, ஆஜ் தக் சேனலும் ஒளிபரப்பி பின்னர் அதை வாபஸ் பெற்றது.

இதையும் படிங்க: இதுவும் புஸ்ஸா? வயல்வெளியில் கிடந்த பாக்., ஏவுகணை..! பஞ்சாப்பில் பதற்றம்..!

பிஐபி அமைப்பின் உண்மை கண்டறியும் பிரிவு எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “போலியான வீடியோக்களை  தயாரித்து தனது சொந்த மக்களை தவறாக வழிநடத்த பாகிஸ்தான் செய்த முயற். வீடியோவில், இந்தியப் படைகளால் பாகிஸ்தான் விமானப்படை தளம் அழிக்கப்பட்டது பற்றி செய்தி சேனல் பேசியது. ஆனால், இதை மறைத்துவிட்டு பாகிஸ்தான் வேறுமாதிரி திரிதித்து செய்தி வெளியிட்டது”எனத் தெரிவித்தது.

அது மட்டுமல்லாமல் இந்திய விமானப்படைத் தளங்களை பாகிஸ்தான் ராணுவம்தாக்கி அழித்ததை இந்திய ராணுவம் ஒப்புக்கொண்டதாக வீடியோ காட்சிகளை போலியாகத் தயாரித்து, அதை இந்தியா டிவி செய்தி சேனல் வெளியிட்டதாக பாகிஸ்தான் ராணுவம் பரப்பியது. இதன் மூலம் போலியான வீடியோக்களை தயாரித்து தனது சொந்த நாட்டு மக்களையே பாகிஸ்தான் ராணுவம் ஏமாற்ற முயற்சித்தது தெரியவந்துள்ளது.

ஆனால் உண்மையில் நடந்தது என்னவென்றால், பாகிஸ்தான் ராணுவம் அனுப்பிய ட்ரோன்களை இந்திய ராணுவம் இடைமறித்து தாக்கி அழித்தது, பாகிஸ்தான் ஏவுகணைகளை இந்திய ராணுவம் எப்-400 ஏவுகணை மூலம்  இடைமறித்து தாக்கி அழித்ததுதான் உண்மை. இந்த போரில் இரு தரப்பு நாடுகளின் ராணுவத்துக்கும் கடும் சேதம், உயிரிழப்பு ஏற்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் வரைபடங்களை வெளியிட்டதும் பொய்யாகும். இது அந்நாட்டு மக்களை நம்ப வைக்க பாகிஸ்தான் ராணுவம் போலியாகத் தயாரித்தது.

இந்திய பெண் விமானி ஒருவர் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியிருப்பதாக அல்ஜசீரா ஆங்கிலம் செய்திகளில் ஒளிபரப்பப்பட்டது. ஆனால்,உண்மையில் இந்தியா சார்பில் எந்த விமானியும் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கவில்லை. போர் தொடங்கியது முதல் கடைசி வரை எந்த இந்திய விமானியும் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கவில்லை என்பதுதான் உண்மையாகும். 

இருதரப்பு எல்லைப்பகுதிகளில் மக்களிடம் பதற்றத்தை அதிகரிக்க பொய் செய்திகலையும், வதந்திகளையும் பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டு பரப்பி மக்களை அச்சுறுத்தியது. உதம்பூரில் கடும் குண்டுவெடிப்பு என்று கட்டுக்கதை வெளியிட்டது பின்னர் அதை இந்திய ராணுவம் செய்தியை உறுதி செய்து பொய் என அறிவித்தது என பிஐபி உண்மை கண்டறியும் பிரிவு தெரிவித்துள்ளது.
 

இதையும் படிங்க: பிளாக் அவுட் என்றால் என்ன? பஞ்சாபில் பல மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கடைபிடிப்பு?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share