×
 

ஜப்பான் அரசு கண்ணில் மண்ணை தூவிய நிகழ்ச்சி.,! சட்டவிரோதமாக கட்டப்பட்ட மசூதி! இடித்து அகற்ற உத்தரவு!

ஜப்பான் அரசின் கண்ணில் மண்ணை துாவி, அந்நாட்டு அதிகாரிகளுக்கே தெரியாமல் பாகிஸ்தானியர்கள் மசூதி ஒன்றையும் கட்டி, அதன் திறப்பு விழாவுக்கு தங்கள் நாட்டு துாதரையும் அழைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டோக்கியோ: ஜப்பான் அரசின் அனுமதியின்றி ரகசியமாக மசூதி ஒன்றைக் கட்டி, அதன் திறப்பு விழாவுக்கு தங்கள் நாட்டு தூதரையும் அழைத்த பாகிஸ்தானியர்களின் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானின் கவகோயே நகரில் பாகிஸ்தானியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில், உள்ளூர் அரசிடம் எந்த முன் அனுமதியும் பெறாமல் மசூதியைக் கட்டி முடித்தனர். நகர்ப்புற மேம்பாட்டுக் கட்டுப்பாட்டு மண்டலத்தில் அமைந்துள்ள இந்த இடத்தில் கட்டுமானப் பணிகளுக்கு கடுமையான தடைகள் உள்ளன. ஆனாலும், உள்ளூர் மக்களிடம் கருத்து கேட்காமல் ரகசியமாக கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டது.

மசூதியின் திறப்பு விழாவை பிரமாண்டமாக நடத்திய அவர்கள், ஜப்பானுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் ஹமீத்தை சிறப்பு விருந்தினராக அழைத்தனர். திறப்பு விழா முடிந்த பிறகு, “ஜப்பானில் பாகிஸ்தானியர்களின் சாதனை” என சமூக ஊடகங்களில் பதிவிட்டபோது தான் இந்த விவகாரம் ஜப்பான் அரசுக்கு தெரியவந்தது.

இதையும் படிங்க: ஏளனமா பேசினாங்க... இதான் அவங்களுக்கு தெரிஞ்ச PROTOCOL போல... விளாசிய MLA பல்லவி..!

இந்த சட்டவிரோத கட்டுமானத்துக்கு எதிராக ஜப்பான் மக்கள் தீவிரமாகக் குரல் எழுப்பினர். விதிமீறலுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய அவர்கள், மசூதியை இடிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து ஜப்பான் அரசு சட்டவிரோதமாக கட்டப்பட்ட மசூதியை இடிக்க உத்தரவிட்டுள்ளது.

விஷயம் பெரும் பரபரப்பாகியதும், டோக்கியோவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் திடீரென பல்டி அடித்தது. “இந்த மசூதி கட்டுமானத்துக்கு எங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை” என அவசர அவசரமாக அறிக்கை வெளியிட்டது.

ஜப்பான் போன்ற கட்டுப்பாடான நாட்டில் அனுமதியின்றி மத வழிபாட்டுத் தலம் கட்டப்பட்ட சம்பவம் அங்குள்ள மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் சட்டங்களை மதிக்காமல் செயல்பட்டதாக பாகிஸ்தானியர்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

இந்தச் சம்பவம் ஜப்பான் முழுவதும் வெளிநாட்டினர் தொடர்பான கட்டுமான விதிமீறல்கள் குறித்த விவாதத்தை தீவிரப்படுத்தியுள்ளது. மசூதி இடிக்கப்படும் நிலைக்கு வந்துள்ளதால், பாகிஸ்தானிய சமூகத்தினரும் பெரும் நெருக்கடியில் உள்ளனர்.

இதையும் படிங்க: நான் இல்லையினா இஸ்ரேல்னு ஒருநாடே இருந்திருக்காது! ஒபாமா செஞ்சதை நான் மாத்தினேன்! அதிபர் ட்ரம்ப் அதிரடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share