இந்தியாவுக்கே பெருமை! பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் மிக உயரிய விருது வழங்கி கௌரவிப்பு..!
சைப்ரஸ் நாட்டுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.
அரசு முறை பயணமாக மேற்கு ஆசியாவில் கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடானா சைப்ரஸ், கனடா மற்றும் குரேஷியா ஆகிய 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். முதலில் சைப்ரசில் நடந்த வர்த்தக மன்றத்தில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார்.
இந்தப் பயணத்தின் போது, சைப்ரஸ் குடியரசின் மிக உயர்ந்த கௌரவமான "கிராண்ட் க்ராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் மகாரியோஸ் III" (Grand Cross of the Order of Makarios III) விருது அவருக்கு சைப்ரஸ் குடியரசுத் தலைவர் நிகோஸ் கிறிஸ்டோடவுலிட்சால் வழங்கப்பட்டது. இந்த விருது, சைப்ரஸின் முதல் குடியரசுத் தலைவரான பேராயர் மகாரியோஸ் III நினைவாக பெயரிடப்பட்டது மற்றும் பொதுவாக வெளிநாட்டு அரசுத் தலைவர்கள் மற்றும் அரசாங்கத் தலைவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க: #BREAKING: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2027 மார்ச் முதல் சாதிவாரி கணக்கெடுப்பு.. மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
இந்தியா-சைப்ரஸ் உறவுகளை வலுப்படுத்துவதற்கும், வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் மக்கள் இடையேயான தொடர்புகளை மேம்படுத்துவதற்கும் பிரதமர் மோடி ஆற்றிய பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது அமைந்தது. பிரதமர் மோடி இந்த விருதைப் பெற்ற பிறகு, அதை இந்தியா-சைப்ரஸ் நாடுகளுக்கிடையேயான நட்புறவுக்கு அர்ப்பணிப்பதாகக் கூறினார்.
இதையும் படிங்க: கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி..! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!!