மிஸ் ஆக கூடாது..!! ஆர்.பி உதயகுமார் காரில் அதிரடி சோதனை... தேர்தல் பறக்கும் படையினர் மும்முரம்..!!
முன்னாள் அமைச்சரும் திருமங்கலம் தொகுதி வேட்பாளருமான ஆர்.பி. உதயகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் காரில் தேர்தல் பறக்கும் படை சோதனை நடத்தப்பட்டது.
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் காலத்தில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களை சோதனை செய்யப்படுகின்றன. இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு மார்ச் 15 முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த விதிகள் சுதந்திரமான, நியாயமான தேர்தலை உறுதி செய்வதற்காக அமல்படுத்தப்படுகின்றன.
வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள், மதுபானம் போன்றவற்றை வழங்கி செல்வாக்கு செலுத்துவதைத் தடுக்கும் வகையில் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள் தீவிரமாக செயல்படுத்தப்படுகின்றன.
தேர்தல் ஆணையம் மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான பறக்கும் படை அணிகளை அமைத்துள்ளது. ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் பல அணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, சென்னையில் ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று பறக்கும் படை அணிகள், மூன்று நிலையான கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் இரண்டு வீடியோ கண்காணிப்பு அணிகள் என மொத்தம் 128 வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இதையும் படிங்க: விஜயின் பெரம்பூர் பரப்புரைக்கு அனுமதி மறுப்பு..! தொண்டர்கள் செம்ம ஷாக்..!!
இந்த நிலையில், மதுரையில் இருந்து டி. குன்னத்தூருக்கு முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர் பி உதயகுமார் ,தனது காரில் தனது ஆதரவாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் சென்று கொண்டிருந்த போது ஆலம்பட்டி என்ற இடத்தில் பறக்கும் படை போலீ சார் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது உதயகுமார் வந்த காரிலும் அவரது ஆதரவாளர்கள் மற்றும் நிர்வாகிகள் வந்த காரையும் முழுவதுமாக சோதனை நடத்தினர். 20 நிமிட சோதனைக்கு பிறகு பறக்கும் படை போலீசார் எந்தவித பொருட்களோ, பணமோ கிடைக்கவில்லை, பின்னர் அவர்களை அனுப்பி வைத்தனர். இதே போல் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் வேட்பாளர்களின் கார்களை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னை வேட்பாளர்கள் யார்..? தொடர்ந்து சஸ்பென்ஸ் வைக்கும் அதிமுக..! தொண்டர்கள் ஷாக்..!!