×
 

ரிதன்யா தற்கொலை வழக்கு..! காவல்துறை பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

திருப்பூரில் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் சேர்ந்தவர் தொழிலதிபரின் மகள் ரிதன்யா. இவருக்கு கவின்குமார் என்பவரோடு சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. திருமணமாகி 78 நாட்கள் மட்டுமே ஆன நிலையில், கணவன் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் ரிதன்யாவை கொடுமைப்படுத்தி உள்ளனர்.

இதனால் மனமடைந்து போன ரிதன்யா செய்வதறியாமல் இருந்து வந்துள்ளார். இதனிடையே தனது காரை ஓட்டிச் சென்ற ரிதன்யா தாளக்கரை லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் வழிபட்டுள்ளார். தொடர்ந்து சாலையோரமாக காரை நிறுத்திய அவர், தனது வாழ்க்கை தொடர்பாகவும், தனது சாவுக்கு யார் காரணம் என்பது தொடர்பாகவும் ஆடியோ ஒன்றை வாட்ஸ் அப் மூலம் தனது தந்தைக்கு அனுப்பி விட்டு தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

தனது திருமண வாழ்க்கை சரியாக இல்லை என்றும் ஒருவனுக்கு ஒருத்தி தான் என்ற ஆடியோவையும் ரிதன்யா தன் அப்பாவுக்கு அனுப்பினார். மேலும், கணவன் கவின்குமார் மற்றும் மாமனார் கிருஷ்ணமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் தன்னை கொடுமைப்படுத்தியதாக ரிதன்யா வேதனை தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: ரிதன்யா தற்கொலை வழக்கு... கணவர், மாமனார், மாமியாருக்கு ஜாமீன் கிடைத்ததா? நீதிமன்றம் அதிரடி!!

இனியும் தன்னால் வாழ முடியாது என தந்தைக்கு ஆடியோ அனுப்பி வைத்துவிட்டு ரிதன்யா எடுத்த விபரீத முடிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனை அடுத்து ரிதன்யாவின் கணவர், மாமனார், மாமியார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 

இவர்கள் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனிடையே, தங்கள் மகள் உயிரிழப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் என ரிதன்யாவின் பெற்றோர் கோரி வருகின்றனர். இந்த நிலையில், பாலியல் துன்புறுத்தல் பிரிவிலும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோவை மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமாரிடம் ரிதன்யாவின் தந்தை புகார் அளித்தார். 

ரிதன்யாவின் கணவர், மாமனார், மாமியார் ஆகியோரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி முறையிட்டனர். இதில் காவல்துறை பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிறப்புறுப்பில் மிளகாய் தூள்... அரக்கத்தனத்தின் உச்சம்! காளியம்மாள் பரபர பிரஸ்மீட்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share