×
 

ரொம்ப அன்பான மனுஷன்... இப்படியா நடக்கணும்? ரோபோ சங்கர் மறைவுக்கு விஜய் இரங்கல்!

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் மறைவுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி உலகில் சிரிப்பின் ராஜாவாகத் திகழ்ந்த ரோபோ சங்கர், நேற்று இரவு நம்மை விட்டுப் பிரிந்தார். அவரது திடீர் மரணம் தமிழ் சினிமா மற்றும் ரசிகர்களிடையே ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. 46 வயதில் இழந்த இந்தப் பெரும் நட்சத்திரம், தனது தனித்துவமான நகைச்சுவை மற்றும் ரோபோ போன்ற நடனத்தால் மக்களின் இதயங்களில் என்றும் நிலைத்து நிற்கும். இளமை காலத்தில் இருந்தே நகைச்சுவை மற்றும் மிமிக்ரி கலைக்கு ஈடுபட்டார். கிராமப்புற நிகழ்ச்சிகளில் ரோபோ போன்ற நடனம் ஆடுவதன் மூலம் ரோபோ சங்கர் என்ற பெயரைப் பெற்றார்.

இது அவரது தனித்துவமான அடையாளமாக மாறியது. தொலைக்காட்சி உலகில் அவர் பிரபலமானது கலக்கபோவது யாரு நிகழ்ச்சி ஆகியவற்றில் அவரது ஸ்டாண்ட்-அப் காமெடி, உடல் மொழி மற்றும் மிமிக்ரி அனைவரையும் கவர்ந்தது. அவரது திரைப்பட டயலாக்குகளில் “அன்னைக்கு காலையில ஆறு மணிக்கு” என்பது மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தது. பல்வேறு திரைப்படங்களில் தனக்கென தனி பாணியை அமைத்து நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த ரோபோ சங்கர் இன்று நம்முடன் இல்லை என்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது.

உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ரோபோ சங்கர் சிகிச்சை பலனின்றி காலமானார். நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் மறைவுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கென தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர் என்றும் அனைவரிடத்திலும் அன்போடு பழகும் பண்பாளர் ரோபோ சங்கர் எனவும் புகழாரம் சூட்டினார்.

இதையும் படிங்க: ரோபோ சங்கர் எப்படி வளர்ந்தாரு தெரியுமா? இபிஎஸ் உருக்கம்

நண்பர் ரோபோ ஷங்கரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தன்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவதாகவும் விஜய் தெரிவித்தார்.

இதையும் படிங்க: TVK நோட் பண்ணுங்க... விஜய் பிரச்சாரம் செய்யும் இடத்தை மாத்திட்டாங்க!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share