×
 

உக்ரைனின் அடியை தாக்க திணறும் ரஷ்யா.. மாஸ்கோவில் மாறிய காட்சிகள்.. பதிலடிக்கு பக்கா ஸ்கெட்ச் ரெடி..!

ரஷ்யாவில் பல்வேறு இடங்களில் உக்ரைன் தொடர்ந்து ட்ரோன் தாக்குதல் நடத்தி வருவதால் மாஸ்கோ விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

ரஷ்யா உக்ரைன் இடையில் மூன்று ஆண்டுக்கு மேலாக நடந்து வரும் போரில், இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய தாக்குதலை ரஷ்யா மீது உக்ரைன் சமீபத்தில் நடத்தியது. ட்ரோன்கள் வாயிலாக நடத்தப்பட்ட தாக்குதல்களில், ரஷ்யாவின், 40 போர் விமானங்களை உக்ரைன் தகர்த்துள்ளது.

இது, இந்த போரில் ரஷ்யாவுக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய சேதமாக கருதப்படுகிறது. இந்த தாக்குதலில் ரஷ்யாவுக்கு 7 பில்லியன் டாலர் சேதம் ஏற்பட்டுள்ளது என உக்ரைன் அதிகாரிகள் கணித்துள்ளனர்.

போர் நடக்கும் பகுதிகளை கடந்து, ரஷ்யா நிலப்பரப்பில் நீண்ட துாரத்துக்கு உட்பகுதிக்கு வந்து இந்த தாக்குதல்களை உக்ரைன் ராணுவம் நடத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவில் இருந்து தாக்கியத இந்தத் தாக்குதல் ரஷ்யாவிற்கு குறிப்பிடத்தக்க இழப்புகளை ஏற்படுத்தியது. இது முற்றிலும் நியாயமானது என்று ஜெலென்ஸ்கி கூறினார்.

இதையும் படிங்க: ரஷ்யாவின் நோக்கமே இதுதான்.. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பகிரங்க குற்றச்சாட்டு..!

"ஸ்பைடர்ஸ் வலை" என்ற குறியீட்டுப் பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கையில், உக்ரைன் 117 ட்ரோன்களைப் பயன்படுத்தியது. விமான தளங்களில் நிலைநிறுத்தப்பட்ட மூலோபாய கப்பல் ஏவுகணை கேரியர்கள் ரஷ்யாவில் தாக்கப்பட்டன என்றும் கூறினார்.

முர்மான்ஸ்க், இர்குட்ஸ்க், இவானோவோ, ரியாசான் மற்றும் அமுர் பகுதிகளில் உள்ள ஐந்து விமான தளங்கள் மீது உக்ரைன் தாக்குதல்கள் நடத்தியது. இவானோவோ, ரியாசான் மற்றும் அமுர் விமானநிலையங்கள் மீதான அனைத்து தாக்குதல்களும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன. 162 உக்ரைன் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தினோம் ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சகம் இதனை ஏற்கும் வகையில் அறிக்கை வெளியிட்டு இருந்தது.

இதற்கு ரஷ்யா உடனே தனது பதிலடியை கொடுத்தது. உக்ரைன் மீது ரஷ்யா 400 ட்ரோன்களையும், 40 ஏவுகணைகளையும் வீசி தாக்குதல் நடத்தியது. இதனை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உறுதிப்படுத்தி உள்ளார். இந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்களில் சிலர் மீட்புப்படையினர் எனத் தெரிய வந்துள்ளது. ரஷ்யாவின் இந்த தாக்குதலில், உக்ரைனின் தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட அரசு கட்டடங்கள், 5 தனியார் சொத்துகள், 5 அடுக்குமாடி குடியிருப்புகள் என 40 சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டது.

தற்போது ரஷ்யாவில் பல்வேறு இடங்களில் உக்ரைன் தொடர்ந்து ட்ரோன் தாக்குதல் நடத்தி வருவதால் மாஸ்கோ விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளது. மாஸ்கோ விமான நிலையங்களில் விமானங்களை ரஷ்யா நிறுத்தியுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

இரண்டு மணி நேரத்தில் உக்ரைனின் 76 ட்ரோன்களை சுட்டு அழித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையமான ரோசாவியாட்சியா பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விமானங்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

தற்போது உக்ரைனுக்கு மிகப்பெரிய பதிலடி கொடுக்க ரஷ்யா தீவிரமாக செயல்பட்டு வருகிறது என அந்நாட்டு நிபுணர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 400 ட்ரோன்கள்.. 40 ஏவுகணைகள்.. உக்ரைன் தாக்குதலுக்கு ரஷ்யா தரமான பதிலடி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share