×
 

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் விஷம் வைத்து கொலை! தீர்த்துக்கட்டியதே அதிபர் புடின் தான்? வெளியான பகீர்!

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி, நச்சு தவளையின் விஷத்தை பயன்படுத்தி கொல்லப்பட்டதாக ஐரோப்பிய நாடுகள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளை ரஷ்யா நிராகரித்துள்ளது.

ரஷ்யாவின் மிக முக்கிய எதிர்க்கட்சி தலைவராக இருந்த அலெக்ஸி நவால்னி (வயது 47) கொல்லப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. 2024 பிப்ரவரி 16 அன்று சைபீரியாவில் உள்ள கடுங்குளிர் சிறையில் (IK-3 Penal Colony) நவால்னி மர்மமான முறையில் உயிரிழந்தார். 

ரஷ்ய சிறைத்துறை அப்போது “நடை பயிற்சியின் போது திடீரென மயங்கி இறந்தார்” என்று அறிவித்தது. ஆனால், அவரது குடும்பத்தினர், ஆதரவாளர்கள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் இதை விஷம் கொடுத்த கொலை என்று குற்றஞ்சாட்டின.

இந்நிலையில், ஜெர்மனியின் மியூனிக் நகரில் நடந்த முன்னணி சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் (Munich Security Conference 2026) பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன், நெதர்லாந்து ஆகிய ஐந்து ஐரோப்பிய நாடுகள் இணைந்து அதிரடி அறிக்கை வெளியிட்டன. 

இதையும் படிங்க: இழப்பை ஏளனம் செய்வதா? நயினார் மன்னிப்பு கேட்கணும்... நாஞ்சில் சம்பத் வலியுறுத்தல்..!

நவால்னியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வு செய்தபோது, 'பிபாடோக்சின்' (Batrachotoxin) எனப்படும் தவளையின் மிகக் கொடிய நச்சு இருந்ததாக தெரிவித்தன. இது உலகின் மிக ஆபத்தான நச்சுகளில் ஒன்று. இந்த நச்சு ரஷ்யாவின் FSB (கிரெம்ளின் உளவுத்துறை) பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இக்குற்றச்சாட்டுக்கு ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா சகாரோவா கடும் மறுப்பு தெரிவித்துள்ளார். “இது மேற்கத்திய நாடுகளின் பொய் பிரசாரம். வினோதமான, அறிவியல் ரீதியில் சாத்தியமற்ற கதைகளை உருவாக்கி தங்கள் உள்நாட்டு பிரச்னைகளிலிருந்து கவனத்தை திசைதிருப்ப முயல்கின்றனர்” என்று அவர் கூறினார். ரஷ்யா இதை “மேற்கத்திய ஊடகங்களின் அரசியல் சதி” என்று சாடியுள்ளது.

நவால்னி ஊழல் எதிர்ப்பு போராட்டத்தால் பிரபலமானவர். புடினின் யுனைடெட் ரஷ்யா கட்சியை “திருடர்கள் கட்சி” என்று அழைத்து இளைஞர்களை திரட்டி பெரும் போராட்டங்களை நடத்தினார். 2020-இல் நர்விச் விஷக்கொலை முயற்சிக்கு உள்ளானார். 2021-இல் சிறைக்கு சென்றார். 2023-இல் 19 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவரது அமைப்பு தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டது.

இந்த புதிய குற்றச்சாட்டு ரஷ்யா-மேற்கு நாடுகள் இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் புதிய தண்டனைகளை விதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நவால்னியின் மரணம் ரஷ்யாவில் எதிர்க்கட்சி இயக்கங்களை பலவீனப்படுத்தியுள்ளது. ஆனால், இந்த விவகாரம் உலக அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தவெக கூட கூட்டணி வேணும்! விஜயை கூப்பிட்டு பேசுங்க! ராகுல்காந்திக்கு அழுத்தம் தரும் காங்., நிர்வாகிகள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share