உக்ரைன் மீது ரஷ்யா பதில் தாக்குதல்! 5 பேர் பலி.. இது சாம்பிள் தான்! ருத்ரதாண்டவத்துக்கு தயாராகும் ரஷ்யா..!
கிழக்கு உக்ரைன் முழுவதும் பல்வேறு பகுதிகளில், ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் பொதுமக்கள் 5 பேர் கொல்லப்பட்டனர்.
ரஷ்யா உக்ரைன் இடையில் மூன்று ஆண்டுக்கு மேலாக நடந்து வரும் போரில், இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய தாக்குதலை ரஷ்யா மீது உக்ரைன் நேற்று நடத்தியது. ட்ரோன்கள் வாயிலாக நடத்தப்பட்ட தாக்குதல்களில், ரஷ்யாவின், 40 போர் விமானங்களை உக்ரைன் தகர்த்துள்ளது.
இது, இந்த போரில் ரஷ்யாவுக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய சேதமாக கருதப்படுகிறது. இந்த தாக்குதலில் ரஷ்யாவுக்கு 7 பில்லியன் டாலர் சேதம் ஏற்பட்டுள்ளது என உக்ரைன் அதிகாரிகள் கணித்துள்ளனர்.
போர் நடக்கும் பகுதிகளை கடந்து, ரஷ்யா நிலப்பரப்பில் நீண்ட துாரத்துக்கு உட்பகுதிக்கு வந்து இந்த தாக்குதல்களை உக்ரைன் ராணுவம் நடத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவில் இருந்து தாக்கியத இந்தத் தாக்குதல் ரஷ்யாவிற்கு குறிப்பிடத்தக்க இழப்புகளை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: ஒரு வருசமா நடந்த ப்ளானிங்.. ரஷ்யாவுக்கு $7 பில்லியன் அமெரிக்க டாலர் நஷ்டம்.. கெத்து காட்டிய ஜெலான்ஸ்கி..!
இது முற்றிலும் நியாயமானது என்று ஜெலென்ஸ்கி கூறினார். "ஸ்பைடர்ஸ் வலை" என்ற குறியீட்டுப் பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கையில், உக்ரைன் 117 ட்ரோன்களைப் பயன்படுத்தியது. விமான தளங்களில் நிலைநிறுத்தப்பட்ட மூலோபாய கப்பல் ஏவுகணை கேரியர்கள் ரஷ்யாவில் தாக்கப்பட்டன என்றும் கூறினார்.
மேலும், ஒரு நொடி கூட நாங்கள் இந்தப் போரை விரும்பவில்லை என்றும், மார்ச் 11 முதல், முழுமையான மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கான அமெரிக்க முன்மொழிவு உள்ள நிலையில், போரைத் தொடரத் தேர்ந்தெடுத்தது ரஷ்யர்கள் தான் என்று தெரிவித்தார்.
இத்தகைய தாக்குதல், ரஷ்யாவில் இதுவரை மேற்கொள்ளப்படாத ஒன்று என்று மேற்கத்திய நாடுகளை சேர்ந்த போர் நிபுணர்கள் கூறுகின்றனர்.
முர்மான்ஸ்க், இர்குட்ஸ்க், இவானோவோ, ரியாசான் மற்றும் அமுர் பகுதிகளில் உள்ள ஐந்து விமான தளங்கள் மீது உக்ரைன் தாக்குதல்கள் நடத்தியது. இவானோவோ, ரியாசான் மற்றும் அமுர் விமானநிலையங்கள் மீதான அனைத்து தாக்குதல்களும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன. 162 உக்ரைன் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தினோம் ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சகம் இதனை ஏற்கும் வகையில் அறிக்கை வெளியிட்டு இருந்தது.
இந்த நிலையில் கிழக்கு உக்ரைன் முழுவதும் பல்வேறு பகுதிகளில், ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியது. உக்ரைனில் டொனெட்ஸக் மற்றும் கார்கிவ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் பொதுமக்கள் 5 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
இது எல்லாம் சாம்பிள் தான். உக்ரைன் தாக்குதலால் ஏற்பட்ட இழப்பு ரஷ்யாவில் இதுவரை மேற்கொள்ளப்படாத ஒன்று என்று மேற்கத்திய நாடுகளை சேர்ந்த போர் நிபுணர்கள் கூறுகின்றனர். மிகப் பயங்கரமான பதிலடி தருவதற்கு ரஷ்யா தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் மேற்கத்திய நாடுகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இதையும் படிங்க: ஆபரேஷன் பவுட்டினா..! ரஷ்யாவின் கைகளை உடைத்த உக்ரைன்.. கோபத்தில் கொந்தளிக்கும் புடின்..!