×
 

எலான் மஸ்க்-க்கு வச்சாங்க ஆப்பு! ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு எதிராக திரும்பும் மெக்சிகோ..!

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மீது நடவடிக்கையை எடுப்பதற்கு ஏற்ப, எந்த வகையிலான சர்வதேச சட்ட விதிகள் மீறப்பட்டு உள்ளன என பரிசீலனை செய்யப்படும் என மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் தெரிவித்துள்ளார்.

உலக பெரும் பணக்காரரும் டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். அதிலும் குறிப்பாக எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளி ஆய்வு, சுற்றுலா உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், ராக்கெட்டின் பூஸ்டரை பத்திரமாக தரையிறக்கும் நோக்கத்துடன் அடுத்தடுத்து ராக்கெட் சோதனையை ஸ்டார்ஷிப் செய்து வருகிறது. 

இந்த ஸ்பேஸ்-எக்ஸின் ஸ்டார்ஷிப், நிலவுக்குச் செல்லும் பயணங்களுக்கான திட்டங்களுடனும், செவ்வாய் கிரகத்துக்கான பயணத் திட்டங்களுடனும், மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் எலான் மஸ்க்கின் நோக்கத்துக்கான நம்பிக்கையாக உள்ளது. 

அதிலும் குறிப்பாக இந்த ஸ்டார்ஷிப் விண்கலம் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் ஒரு லட்சியத் திட்டமாகவே கருதப்படுகிறது. இது மனிதர்களை நிலா மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு அழைத்துச் செல்வது, செயற்கைக்கோள்களை ஏவுவது, மற்றும் விண்வெளியில் சரக்குகளை கொண்டு செல்வது போன்ற நோக்கங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: 2025-ல் இது 3வது தோல்வி.. வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்.. சொதப்பும் திட்டங்களால் எலான் மஸ்க் அப்செட்..!

இந்த சோதனைகளின் ஒரு பகுதியாக டெக்சாஸில் உள்ள ஸ்பேஸ்-எக்ஸின் மாஸ்ஸி (Massey) சோதனை தளத்தில், ஸ்டார்ஷிப் Ship 36 என்ற புரோட்டோடைப் விண்கலம் வெடித்துச் சிதறியது. இது பத்தாவது சோதனைப் பயணத்திற்கான “ஸ்டாட்டிக் ஃபயர் டெஸ்ட்” (static fire test) எனப்படும் இயந்திர சோதனைக்கு தயாராகிக் கொண்டிருந்த போது நிகழ்ந்தது. 

ராக்கெட்டின் அடிப்பகுதியில் இருந்து ஒரு சக்திவாய்ந்த வெடிப்பு ஏற்பட்டு, சுற்றியுள்ள பகுதிகள் தீப்பிழம்புகள் மற்றும் புகையால் சூழ்ந்தது. இதில், மெக்சிகோவின் தமவுலிபாஸ் மாகாணத்திலும் அதன் பாகங்கள் விழுந்துள்ளன. இந்த விபத்தானது ஸ்டார்ஷிப் திட்டத்துக்கு குறிப்பிடத்தக்க பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக, யாரும் காயமடையவில்லை என ஸ்பேஸ்-எக்ஸ் உறுதி படுத்தியுள்ளது. ஆனால் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் தனது அனைத்து விண்கல தயாரிப்புகளையும் காலவரையின்றி நிறுத்தி வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள இந்த பின்னடைவு 2025-ம் ஆண்டில் ஸ்பேஸ்-எக்ஸின் ஸ்டார்ஷிப் திட்டத்ததுக்கான மூன்றாவது தோல்வியாக மாறியுள்ளது.

முன்னதாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில், இரண்டு ஸ்டார்ஷிப் சோதனை விண்கலன்கள் ஏவப்பட்ட சிறிது நேரத்திலேயே வெடித்துச் சிதறின. ஒரு விண்கலம் கரீபியனில் விழுந்தது, மற்றொன்று கட்டுப்பாட்டை இழந்து அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்து உடைந்தது. இறுதியாக விண்ணில் செலுத்தப்பட்ட விண்கலம் அமெரிக்கா மற்றும் மெக்சிகோ எல்லையருகே வெடித்து விழுந்தது. 

இந்த சூழலில், மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம், இதற்கு எதிராக சட்ட நடவடிக்கையை எடுக்க முடிவு செய்துள்ளார். இதுபற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஷீன்பாம், உண்மையில் குப்பைகள் சேர்ந்துள்ளன. தேவையான நடவடிக்கையை எடுப்பதற்கு ஏற்ப, எந்த வகையிலான சர்வதேச சட்ட விதிகள் மீறப்பட்டு உள்ளன என பரிசீலனை செய்யப்படும் என்றார்.

ராக்கெட் கழிவுகளால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றி ஒரு விரிவான மறுஆய்வு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் கூறினார். தற்போது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குழுவினர், ராக்கெட் கழிவுகள் பற்றி அவ்வப்போது கவலை தெரிவித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: பேசுனது தப்புதான்.. யூடர்ன் போட்டு சரண்டரான மஸ்க்.. மன்னித்து பெரிய மனுஷனான டிரம்ப்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share