லண்டனில் மாஸ் காட்டிய தல-தளபதி காம்போ..!! அதிர்ந்த சில்வர்ஸ்டோன்!! கொடியசைத்த விஜய்.. சீறிய அஜித்..!!
அஜித் தனது அணியினரை முதல்வருக்கு அறிமுகம் செய்து, இருவரும் ஒன்றாகப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் மேற்கொண்ட முதல் வெளிநாட்டுப் பயணத்தின் ஒரு பகுதியாக, பிரிட்டனின் உலகப் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடைபெற்று வரும் மிச்செலின் லீ மான்ஸ் கப் கார் பந்தயத்தை பச்சைக்கொடி காட்டி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வு, தமிழ்த் திரையுலகின் இரு பெரும் நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித் குமார் ஆகியோரை ஒரே மேடையில் இணைத்ததுடன், ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. லண்டனில் தங்கியிருந்த சொகுசு விடுதியிலிருந்து புறப்பட்ட முதல்வர் விஜய், அங்கு குவிந்திருந்த ரசிகர்களுக்கு கை அசைத்து வரவேற்று, ஆட்டோகிராப்களும் வழங்கினார்.
இந்திய நேரப்படி இரவு 9.45 மணியளவில் தொடங்கிய இந்த இரண்டு மணி நேர பந்தயத்தில், அஜித் குமார் தனது அணியான அஜித் ரெடண்ட் பை விராஜ் சார்பில் எல்எம்பி3 புரோ/அம் பிரிவில் பங்கேற்றுள்ளார். அவர் பிரெஞ்சு ஓட்டுநர் ரோமைன் வோஸ்னியாக் உடன் இணைந்து லிஜியர் காரில் போட்டியிட்டார். முன்னாள் ஃபார்முலா ஒன் ஓட்டுநர் நரேன் கார்த்திகேயன் உள்ளிட்ட பிற இந்திய ஓட்டுநர்களும் இதில் இடம்பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க: லண்டன் செல்லும் CM..!! ரேஸ் களத்தில் அஜித்.. நேரில் காண வருகிறாரா விஜய்? எகிறும் எதிர்பார்ப்பு..!!
https://x.com/Ayyappan_1504/status/2098806603114070108/video/1
பந்தய மைதானத்திற்கு வந்த முதல்வரை அஜித் குமார் ஆரத்தழுவி வரவேற்றார். அஜித்தைப் பார்த்ததும் விஜய் ஓடிவந்து அவரைக் கட்டி அணைத்தார். இந்த அன்பான சந்திப்பைக் கண்ட ரசிகர்கள் “தளபதி”, “தல” என முழக்கமிட்டு ஆர்ப்பரித்தனர். விஜயுடன் வந்த விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவையும் அஜித் ஆரத்தழுவி வரவேற்றார். பின்னர் அஜித் தனது அணியினரை முதல்வருக்கு அறிமுகம் செய்து, இருவரும் ஒன்றாகப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, லண்டனில் உள்ள தமிழர்கள் குழுவாகப் பேருந்துகளில் செல்லும் காட்சிகளையும் பதிவேற்றி வருகின்றனர்.முதல்வர் விஜய் இந்தப் பயணத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதோடு, சில்வர்ஸ்டோனின் உள்கட்டமைப்பை ஆய்வு செய்து, மாநிலத்தில் மோட்டார் விளையாட்டு நகரம் அமைக்கும் திட்டத்திற்கும் அடித்தளம் அமைக்க இருப்பதாகத் தெரிகிறது.
https://twitter.com/i/status/2098784269963587728
அஜித் குமார், முதல்வரின் வருகையைப் பாராட்டி, இத்தகைய சர்வதேசப் போட்டிகள் இந்தியாவிலும் நடைபெற வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். திரையுலகில் பல ஆண்டுகால சகபயணத்தைப் பகிர்ந்துகொண்ட இருவரும், ரசிகர் போட்டியைத் தாண்டி விளையாட்டு மூலம் ஒன்றிணைந்த இந்தத் தருணம், தமிழக அரசின் விளையாட்டுத் துறை வளர்ச்சிக்கான புதிய அத்தியாயமாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!