×
 

சி.எம். கன்ட்ரோலில் இருக்கும் துறையில் சீட்டிங்... பல கோடி ரூபாய் நஷ்டம்... புள்ளி விவரத்தோடு போட்டுடைத்த சு.வெங்கடேசன்...!

முதல்வர் அவர்களே உங்களின் பொறுப்பின் கீழ் வரும் ஒரு துறையில், தனியார் நிறுவனம் மிகப்பெரிய மோசடி செய்கிறது.மக்களின் சுகாதாரம் கேள்விக்குறி ஆகிறது

மதுரை மாநகராட்சியில் தூய்மை பணிகளை மேற்கொள்ளும் அவர்லேன்ட் என்ற ஒப்பந்த நிறுவனத்தின் முறைகேடுகளை கண்டித்தும், ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் எம்.பி சு.வெங்கடேசன் பங்கேற்றார்.

பின்னர் அவர் அளித்த பேட்டியில், "அவர்லேன்ட் என்ற தனியார் ஒப்பந்த  நிறுவனம் தூய்மை பணியில் தொடர்ந்து மிகப்பெரிய அளவில் மோசடி செய்கிறது. தினமும் 916 டன் குப்பையை அகற்றுவதற்கு பதிலாக, மண்ணை அள்ளி கொட்டி கணக்கு காட்டுகிறார்கள். இதனை பலமுறை கண்டித்துள்ளோம். கடந்த பிப்ரவரி மாதம் 1000 டன் மண்ணை அள்ளி கொட்டி கணக்கு காட்டி மோசடி செய்தும் இந்த நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படவில்லை.

முதல்வர் அவர்களே உங்களின் பொறுப்பின் கீழ் வரும் ஒரு துறையில், தனியார் நிறுவனம் மிகப்பெரிய மோசடி செய்கிறது.மக்களின் சுகாதாரம் கேள்விக்குறி ஆகிறது, பல வாரங்களாக குப்பைகள் தேங்கியுள்ளன, அரசாங்கத்திற்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தும் நிறுவனத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதையும் படிங்க: மதுரையில் தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்... தேங்கிய குப்பைகள்... மக்கள் அவதி..!!

அரசாங்கத்தில் "மேலே" இருக்கும் அதிகாரிகளின் support இருக்கும் காரணத்தால் தான் கீழே அதிகாரிகளால், இந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லையோ என தோன்றுகிறது. 

தமிழகம் முழுவதும் பிற மாநகராட்சி, நகராட்சிகளிலும் தனியார்மயத்தை அனுமதிக்க கூடாது. Ourland நிறுவனத்தின் மீது நீங்கள் எடுக்கும் நடவடிக்கை தான் மக்களுக்கு நீங்கள் வழங்கும் நீதியாக இருக்கும்.

கடந்த காலத்திலும் இந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை இல்லை. இந்த காலத்தில் நடவடிக்கை இல்லை. இரண்டு அரசிலும் இந்த நிறுவனம் செல்வாக்கு செலுத்திறதா?. இந்த அரசில் அந்த செல்வாக்கு இல்லை என்றால், நீங்கள் மக்களின் பக்கம் தான் இருக்கிறீர்கள் என்றால், இந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து அதை நீங்கள் நிரூபிக்க வேண்டும்.

அதிமுக ஆட்சியில் போடப்பட்ட அரசாணையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். வெறும் 10 நிறுவனத்தின் கொள்ளை லாபத்திற்காக 5 கோடி மக்களின் சுகாதார நலன்களை கேள்விக்குறியாக்க கூடாது" என்றார்.
 

இதையும் படிங்க: மதுரை எய்ம்ஸ் ஆகஸ்ட்டில் திறப்பு..? பணிகளை முடிக்க மும்முரம்... எகிறும் எதிர்பார்ப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share