சுவிஸ் வங்கியில் குவியும் கருப்பு பணம்... இந்தியர்கள் பணம் மட்டும் இவ்வளவு கோடியா?
இந்தியாவில் இது பெரும்பாலும் கருப்பு பணமாக கருதப்பட்டாலும் சுவிட்சர்லாந்தில் சட்டப்பூர்வ சொத்தாக கருதப்படுகிறது.
இந்தியர்களின் பணம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாக சுவிஸ் தேசிய வங்கி அறிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள பல்வேறு வங்கிகளில் ஏரளமான இந்திய தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் கோடிக்கணக்கில் நிதியை இருப்பு வைத்துள்ளனர். இந்தியாவில் இது பெரும்பாலும் கருப்பு பணமாக கருதப்பட்டாலும் சுவிட்சர்லாந்தில் சட்டப்பூர்வ சொத்தாக கருதப்படுகிறது. இந்த கணக்கு மற்றும் தொகை விவரங்களை சுவிட்சர்லாந்து தேசிய வங்கி அவ்வப்போது இந்தியாவுடன் பகிர்ந்து வருகிறது. அதன்படி சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் தனிநபர் கணக்குகளில் டெபாசிட் 11சதவீதம் அதிகரித்துள்ளது.
மொத்தம் 3,675 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிஸ் வங்கிகளில் உள்ள மொத்த இந்திய டெபாசிட்களில் இந்திய தனிநபர்களின் பங்களிப்பு பத்தில் ஒரு பங்காக உள்ளது. பெரும்பான்மையான பணம் வங்கிகள் நிறுவனங்கள் கணக்கில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஸ்விஸ் வங்கிகளில் இந்திய டெபாசிட் கடந்த ஆண்டில் மூன்று மடங்கு அதிகரித்து மொத்தம் 37,600 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: போன வேகத்தில் திரும்பிய இண்டிகோ விமானம்...அவசரமாக தரையிறங்கியதால் கதி கலங்கிய பயணிகள்
சுவிஸ் புள்ளிவிவரங்களின்படி, 2023 ஆம் ஆண்டில் இந்திய வைப்புத்தொகை கணிசமாகக் குறைந்து, இப்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. 2023 ஆம் ஆண்டில், சுவிஸ் வங்கிகளில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் வைத்திருக்கும் பணத்தின் அளவு 70 சதவீதம் குறைந்து, நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 1.04 பில்லியன் சுவிஸ் பிராங்குகளாகக் குறைந்தது. ஆனால் 2024 ஆம் ஆண்டில் இந்தத் தொகை மீண்டும் கணிசமாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே முதல் முறை அதிகபட்சமாக அதிகரித்துள்ளது. அந்த ஆண்டு, இந்திய இருப்பு 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. அவை 3.83 பில்லியன் சுவிஸ் பிராங்குகளை எட்டின.
இதையும் படிங்க: கல்லூரிக்கே கட்டிடம் இல்ல... எய்ம்ஸ் பத்திலாம் பேசலாமா?நக்கலடித்த தமிழிசை