எனக்கு 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள்.. டெலிகிராம் நிறுவனரின் செயலால் அலறிய இணையம்..!
பாவெல் தூரோவ் 3 மனைவிகள் மூலம் ஆறு குழந்தைகளைப் பெற்று வளர்த்து வரும் துரோவ், விந்து தானம் மூலம் 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கும் பயாலஜிக்கல் தந்தையாக இருக்கிறார்.
டெலிகிராம் செயலியை உருவாக்கி, அதன் தலைமை செயல் அதிகாரியாக செயல்படுபவர் பாவெல் துரோவ். 40 வயதான துரோவ், உலகின் முக்கிய பணக்காரர்களில் ஒருவர் அவருக்கு நூற்று பதினாறு ஆயிரம் கோடி(Rs.1,16,000) ரூபாய்(13.9 பில்லியன் டாலர்) சொத்து உள்ளது. 3 மனைவிகள் மூலம் ஆறு குழந்தைகளைப் பெற்று வளர்த்து வரும் துரோவ், விந்து தானம் மூலம் 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கும் பயாலஜிக்கல் தந்தையாக இருக்கிறார்.
ரஷ்யாவில் பிறந்த பாவெல் துரோவ் அந்நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் ஒரு செயற்கை கருத்தரித்தல் மையத்தில் கடந்த 15 ஆண்டுகளாக விந்து தானம் செய்து வருகிறார். குழந்தை வேண்டும் என விரும்பும் பெண்கள் இந்த கருத்தரித்தல் மையத்தை தொடர்புகொண்டு பாவெல் துரோவின் விந்துவை தானமாக பெற்றுக் குழந்தை பெற்றுக்கொள்கின்றனர்.
அப்படி விந்து தானம் பெறும் பெண்களின் பிரசவ செலவு முழுவதையும் பாவெல் துரோவ் ஏற்றுக்கொள்கிறார். இப்படி விந்து தானம் செய்ததன் மூலம் அவருக்கு 12 நாடுகளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் தனது முழு சொத்தையும் வழங்க போவதாக பாவெல் துரோவ் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கருணை அடிப்படையிலான வேலை ! அனைத்து தலைமைச் செயலாளர்களுக்கும் பறந்த அதிரடி உத்தரவு
நான் என் குழந்தைகளிடம் எந்த வித்தியாசமும் காட்டப் போவதில்லை. இயற்கையாக பிறந்திருந்தாலும், விந்து தானம் மூலம் பிறந்திருந்தாலும் அவர்கள் அனைவரும் என் குழந்தைகளே. அவர்களுக்கு சம உரிமை வழங்கப்படும். அதனால் அவர்களுக்கு என் சொத்துகளில் பங்கு உண்டு. அதற்காக அவர்களுக்கு உயில் எழுதி வைத்திருக்கிறேன். 30 ஆண்டுகளுக்கு பிறகு அவர்களுக்கு என் சொத்துகள் போய் சேரும் என பாவெல் துரோவ் கூறி உள்ளார்.
இது தொடர்பாக பிரெஞ்சு பத்திரிகையான லு பாயிண்டி செய்தியிடம் அளித்த பேட்டியில், ''எனக்கு மூன்று மனைவிகள். ஒவ்வொரு மனைவிக்கும் இரண்டு குழந்தைகள். இவர்கள்தான் என் அதிகாரப்பூர்வ குழந்தைகள். இவர்கள்தான் என்னுடைய $13.9 பில்லியன் சொத்துகளை பிரித்துக்கொள்வார்கள்.
ஆனால், டெலிகிராம் செயலியால் நான் எதிர்கொள்ளும் சட்ட சிக்கல்களால் அடுத்த முப்பது ஆண்டுக்கு என் குழந்தைகள் இந்த சொத்துகளை பிரித்துக்கொள்ள முடியாது. அவர்கள் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்களைப் போல வாழ்ந்து, தங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். தங்களை நம்ப கற்றுக்கொள்ள வேண்டும். வங்கிக் கணக்கைச் சார்ந்திருக்கக்கூடாது என்று நான் விரும்புகிறேன்.
இவர்கள் தவிர எனக்கு 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருக்கிறார்கள் தெரியுமா?15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நண்பருக்கு உதவுவதற்காக விந்தணு தானம் செய்யத் தொடங்கினேன். அதன் மூலம் எனக்கு 12 நாடுகளில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கருத்தரித்ததாக அந்த மருத்துவமனை சமீபத்தில் என்னிடம் தெரிவித்தது. அப்படியானால் நான் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அப்பா." என்றார்.
இதையும் படிங்க: "இஃப் யூ பேட் ஐ அம் யுவர் டாட்" . அமெரிக்காவிற்கு பேரழிவுக்கான எச்சரிக்கை கொடுத்த ரஷ்யா...!